கரூர், மே 19-
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மே 26 (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மரு.த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெறவுள்ளது. எனவே, கரூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் தவறாது விவசாயிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறது.