districts

நிர்மல் பள்ளிக்கு நிதி உதவி முன்னுதாரணமாக திகழும் கரூர் குழந்தைகள்

கரூர், அக்.28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கரூர்  மாநகரச் செயலாளரும், சிஐடியு கரூர் மாவட்ட துணைத் தலைவரும், கரூர் மாமன்ற 41-வது வார்டு கவுன்சிலருமான எம்.தண்ட பாணியின் குழந்தைகள் த.பூமிதா, த.கார்த்தி கேயன் ஆகியோர் முறையே 10-வது மற்றும்  எல்கேஜி படித்து வருகின்றனர்.  தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கொடுக்கக் கூடிய பணத்தை உண்டியலில் சேமித்து வைத்து, ஒவ்வொரு வருடமும் நிர்மல் பள்ளி நிதிக்காக தங்களது சேமிப்பு  பணத்தை வழங்கி வருகின்றனர்.  இக்குழந்தைகள் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சிஐடியு மாவட்டக் குழு  அலுவலகத்திற்கு வந்து, தங்களது உண்டி யல் பணம் ரூ.20 ஆயிரத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.ஜீவானந்தத்திடம் மகிழ்ச்சியுடன் வழங்கினர். கடந்த ஆண்டு இவர்கள் ரூ.10 ஆயிரம் நிதியுதவி வழங்கி யது குறிப்பிடத்தக்கது. இந்த குழந்தைகளின் செயல்பாடு, முன்னுதாரணமாக திகழ்கிறது என சிஐடியு  கரூர் மாவட்டக் குழு சார்பாக பாராட்டி, குழந் தைக்கு சால்வை அணிவிக்கப்பட்டது. இதில்  சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், மாவட்ட துணைத் தலைவர்கள் சுப்பிரமணி யன், பாலசுப்பிரமணியன், டிஎன்பிஎல் முரு கேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.