districts

img

கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில அளவிலான சிலம்பப் போட்டி

கும்பகோணம், மார்ச் 2- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் மாநில  அளவிலான சிலம்பம் போட்டி நடைபெற்றது.  இப்போட்டியில் கும்பகோணம் பகுதி யைச் சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்தும், பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 30 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள், சிலம்பம் அகாடமியைச் சேர்ந்த  மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட னர். போட்டிக்கான ஏற்பாடுகளை பள்ளி  தாளாளர் எஸ்.ஏ.கார்த்திகேயன் செய்திருந் தார்.  போட்டி மாணவர்களுக்கு தனிப் பிரிவாக வும், மாணவிகளுக்கு தனி பிரிவாகவும் நடை பெற்றது. வயதின் அடிப்படையிலும், ஏழு வய திற்குட்பட்ட மாணவ-மாணவியர்களுக்கு ஒரு பிரிவாகவும், ஏழு வயது முதல் 10  வயதிற்குட்பட்ட மாணவ-மாணவியர் களுக்கு ஒரு பிரிவாகவும், 11 வயது முதல் 13  வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும், 14 வயது முதல் 16 வயதிற் குட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு ஒரு பிரிவாகவும் நடைபெற்றது. ஒற்றை கம்பு சுற்றுதல், இரட்டைக் கம்பு  சுற்றுதல், சிலம்பச் சண்டை என்று மூன்று விதமாகவும் நடைபெற்றது.  இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய  மாணவ-மாணவியர்களை பாராட்டி பாராட்டுச்  சான்றிதழையும், பதக்கங்களையும் பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்தி கேயன்  வழங்கினார். இதில் 500-க்கும் அதிக மான மாணவ-மாணவியர், ஆசிரியர்கள், பெற்றோர் கலந்து கொண்டனர்.