districts

img

தஞ்சை-விக்கிரவாண்டி தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவில் முடித்துத் தர வேண்டும்

தஞ்சாவூர், டிச.11- தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலை பணியை விரைவில் முடித்துத் தர ஆவன செய்ய வேண்டும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம், மாநிலங்களவை உறுப்பினர் கல்யாணசுந்தரம் நேரில் மனு அளித்தார். இதுகுறித்த அவர் அளித்துள்ள மனுவில் தெரிவித்திருப்பதாவது: “தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி வரை உள்ள தேசிய நெடுஞ்சாலைப் பணியை விரைவில் முடித்துத் தர ஆவன செய்ய வேண்டும். தஞ்சாவூர் முதல் விக்கிரவாண்டி தேசிய நெடுஞ் சாலையில் திருவிடைமருதூர் தாலுகா,  அணைக்கரை ஊராட்சிக்கு மேற்கில் 1  கி.மீ தூரத்தில் கொள்ளிடம் ஆற்றில் புதிய பாலமும், பைபாஸ் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அணைக்கரை ஊராட்சியானது தொடர்பு  இல்லாமல் பிரதான சாலையுடன் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இந் நிலையில், அணைக்கரை அருகில் புதி தாக அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ் சாலையிலிருந்து அணைக்கரை ஊரா ட்சிக்கு அணுகுசாலை அமைத்து தர வேண்டும். கும்பகோணத்தில் வரும் 2028  இல் நடைபெறவுள்ள தென்பாரத கும்ப மேளாவான மகாமக திருவிழாவை முன்னிட்டு, கும்பகோணம் சுற்றுப்புற சாலையும், மாநகரத்திலிருந்து சுற்றுச் சாலைக்கு செல்லும் பல இடங்களில் அணுகுசாலையும், சுற்றுச் சாலையை இணைக்க அரசலாறு ஆற்றில் 4 இடங்களில் உயர்மட்டம் ஆர்சிசி பால மும் அமைத்து தர வேண்டும்.

கும்பகோணம் அருகே உள்ள அறு படை வீடுகளில் ஒன்றான சுவாமிமலை  மற்றும் திருவையாறு தியாகராஜர் ஆரா தனை விழாவின் போது போக்குவரத்து  நெரிசல் ஏற்படுகிறது. இதைத் தவிர்க்கும் பொருட்டு, சுவாமிமலை, திருவையாறு வரை தற்போது இருக்கும்  சாலையை விரிவுபடுத்த, பேரூராட்சி களின் வெளிப்புறமாக தேசிய நெடுஞ் சாலையை இணைக்கும் வகையில் சுற்றுச்சாலை அமைக்க வேண்டும்.  தாராசுரம் பைபாஸிலிருந்து திரு வையாறு வரை காவிரி ஆற்றின் வலது  மற்றும் இடது பக்க கரைகளின் இரு வழிச்சாலையில் 100 அடி அகலத் திற்கு சாலை ஏற்படுத்த வேண்டும். பாபு ராஜபுரம் மற்றும் மாங்குடி ஊராட்சி களுக்கு இடையே காவிரி ஆற்றின் குறுக்கே தஞ்சாவூர்-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையையும், கல்லணை  - பூம்புகார் சாலையையும் இணைக்கும்  வகையில் உயர்மட்ட பாலம் அமைத்து  தர வேண்டும். கும்பகோணம் முதல் தஞ்சாவூர் வரை புதிதாக அமைக்கப்பட்டு வரும்  தேசிய நெடுஞ்சாலையின் அருகே இரு புறமும் அமைந்துள்ள ஊராட்சிகளுக்கு  அணுகுசாலை ஏற்படுத்தி தர வேண்டும்.  தற்சமயம் கும்பகோணம் சுற்றுச்சாலை, தாராசுரம் முதல் சாக் கோட்டை வரை விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த சுற்றுச்சாலையை கோவில் நகரமான நாச்சியார்கோவில் வரை விரிவுபடுத்த வேண்டும்.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டம், கோவிந்தநாட்டுச்சேரி ஊராட் சியை சேர்ந்த குடிகாடு மற்றும் கருப் பூர்படுகை கிராமத்தை, அரியலூர் மாவட்டம், த.பழூர் வட்டம், மேலராம நல்லூர் மற்றும் நடுப்படுகையுடன் இணைக்கும் சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். இதனால் தஞ்சாவூர் மற்றும் அரிய லூர் மாவட்டங்கள் இணைக்கப்படுவ தால் அரியலூர் மக்கள் விவசாயப் பொருட்களை விற்பனை செய்யவும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடை நிற்றலை தவிர்க்கவும், பொதுமக்கள் விரைவாக மருத்துவமனைக்கு செல்வ தற்கும் பயனுள்ளதாக இருக்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.