districts

img

மாநில அளவில் கூடைப்பந்து போட்டி: கல்யாணசுந்தரம் சிபிஎஸ்இ பள்ளி முதலிடம்

கும்பகோணம், ஏப்.30- மாநில அளவிலான மூன்றாவது ஒய்.எஸ்.பி.ஏ. மாநில சாம்பியன்ஷிப்-2024 கூடைப் பந்து போட்டி தஞ்சை வல்லம் பெரியார் மணி யம்மை கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கும்பகோணம் டாக்டர் கல்யாண சுந்தரம் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 14  வயதுக்குட்பட்ட பிரிவில் தங்கப் பதக்கம்  வென்று முதலிடத்திலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவில் 2 ஆம் இடம் பெற்று வெள்ளிப் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பெற்றனர். கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர் களுக்கு கும்பகோணம் டாக்டர்  கல்யாண சுந்தரம் சிபிஎஸ்இ  பள்ளி முதன்மை தலைமை அதி காரி முரளி ராவ், நிறுவனர் ஜி.கே. ராமமூர்த்தி, துணை முதல்வர்கள் பாலாஜி, பரமகுரு  மற்றும் உடற்கல்வித்துறை தலைவர்  ராஜேஷ், கூடைப்பந்து பயிற்றுநர் சீனி வாசன் ஆகியோர் பாராட்டி தங்கம்,  சில்வர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி வாழ்த்தினர்.

;