கரூர், செப்.28- தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், சேரன் உடற்கல்வியியல் கல்லூரி இணைந்து நடத்திய நவீன கபடி மற்றும் சமீபத்திய மேம்பாட்ட அறிவியல் பயிற்சிப் பட்டறை கரூர் புன்னம் சத்திரம் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி விளை யாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழாவிற்கு சேரன் உடற்கல்வியியல் கல்லூரியின் தாளாளர் கே.பாண்டியன் தலைமை வகித்தார். கல்லூரி தலைவர் பி.எம்.கருப்பண்ணன் முன்னிலை வகித்தார். கல்லூரியின் முதல்வர் வி.அமுதா வரவேற்றுப் பேசி னர். தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளை யாட்டுப் பல்கலைக்கழகத் துணை வேந்தர் எம்.சுந்தர் பயிற்சி பட்டறையைத் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். எகிப்து கபடிக் கழக உறுப்பினர் செங்ராகப்முகமது அலி, கே.ராஜேஷ்குமார், எகிப்து கபடி கழக வீரர்கள், வீராங்கனைகளுக்கு கல்லூரியின் தாளாளர் கே.பாண்டி யன் நினைவுப் பரிசு வழங்கினார். விழாவில் சேரன் உடற்கல்வியியல் கல்லூரியின் மாணவ, மாணவி களின் பரதம், கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் மற்றும் களரி, சிலம்பாட்டம், மள்ளர் களம் ஆகிய வீர விளையாட்டுகளும் சிறப்பாக நடைபெற்றது. எகிப்து கபடி வீரர்கள், வீராங்கனைகளுக்கும், சேரன் உடற்கல்வியியல் கல்லூரி கபாடி வீரர்கள், வீரங்கனை களுக்கு இடையே நட்புறவு கபடிப் போட்டி நடைபெற்றது. இதில் ஆடவர், மகளிர் இரண்டு போட்டிகளிலும் சேரன் உடற்கல்வியியல் கல்லூரி வீரர்கள், வீராங்க னைகள் வெற்றி பெற்றனர். கல்லூரியின் உதவிப் பேராசிரியர் நித்யா நன்றி கூறி னார். உடற்கல்வியியல் கல்லூரி நிர்வாக அலுவலர் வெங்கடேசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.