மயிலாடுதுறை, செப்.20 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், காள கஸ்திநாதபுரம் கிராமத்தில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டத்தின்கீழ் பொதுப் பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ், மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முரு கன், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.