திருவாரூர், ஜுன் 26 -
திருவாரூர் மாவட்ட விவசாயிகளின் குறைதீர்க்கும் கூட்டம் ஜூன் 30 (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணி பிற்பகல் முதல் 1.35 மணி வரை திருவாரூர், மாவட்ட ஆட்சி யரக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை, வேளாண்மை சார்ந்த தோட்டக்கலைத்துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டுறவுத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்புத்துறை அலு வலர்கள் விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கை களுக்கு பதிலளிக்க உள்ளனர்.
இதில் திருவாரூர் மாவட்ட முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தெரிவித் துள்ளார்.