கும்பகோணம், ஜூலை 22 -
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் (தன்னாட்சி) 2023 ஜூலை 24 அன்று கடைசிக் கட்டக் கலந்தாய்வு நடை பெறுகிறது என கல்லூரி முதல்வர் அ.மாதவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித் துள்ளார்.
2023-24 ஆம் கல்வி யாண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று முதலாம் ஆண்டு மாண வர்களுக்கான வகுப்பு கள் நடைபெற்று வருகின் றன. கல்லூரியின் ஒரு சில துறைகளிலுள்ள காலி யிடங்களுக்கான கடைசி கட்டக் கலந்தாய்வு ஜூலை 24 (திங்கள்) அன்று நடைபெறுகிறது. இதுவரை கலந்தாய்வில் கலந்து கொண்டு இடம் கிடைக்காத மாணவ-மாணவியர்களும், கலந் துகொள்ளாத மாணவர்க ளும், இந்தக் கலந்தாய் வில் கலந்து கொள்ள லாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.