districts

ஜூலை 14-24 தஞ்சையில் புத்தகத் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக் கூட்டம்

தஞ்சாவூர், ஜூலை 1-  

      தஞ்சாவூர் மாவட்டத்தில் புத்தகத் திரு விழாவினை சிறப்பாக நடத்த மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த  ஆய்வுக் கூட்டம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் நடை பெற்றது.

    பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரி விக்கையில், “தஞ்சாவூர் மாவட்டத்தில் ஜூலை 14 முதல் 24 வரை 11 நாட்கள், மாவட்ட  நிர்வாகம் பொது நூலக இயக்கம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும்  விற்பனையாளர்கள் சங்கம் இணைந்து நடத்தும், மாபெரும் 6 ஆவது புத்தகத் திரு விழா தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் நடைபெற உள்ளது.

   இந்த புத்தகத் திருவிழா சிறப்பாக அமை வதற்காக அனைத்துத் துறை அலுவலர்க ளின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்று, ஒவ்வொரு துறையும் என்னென்ன பணிகள்  மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    புத்தகத் திருவிழா நடைபெறும் வளாகத் தில், அரங்குகள் அமைப்பது, பொதுக் கூட்டம் நடைபெறும் இடம், உணவுத் திரு விழா நடைபெறும் இடம் ஆகியவை குறித்து கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கலந்து  ஆலோசித்து பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

     தஞ்சாவூர் புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நடைபெற உள்ள இலச்சினை வடி வமைப்பு போட்டியில் கலந்து கொள்ள  விரும்புபவர்கள், புத்தகத் திருவிழாவிற் கான இலச்சினையை வடிவமைத்து ஒரு  எம்.பி. அளவில் ஜெ.பி.ஜி (JPEG) படமாக  https://thanjavur.nic.in/thanjavur bookfestival என்ற இணையதளத்தில் தங்கள் பெயர், வயது, முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் ஜூலை 7 (வெள்ளிக் கிழமை) மாலை 5 மணிக்குள் ஆன்-லைனில்  அனுப்பி வைக்க வேண்டும்.  

   மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு, 9176995873, 8110055765, 9443267422 ஆகிய எண் களை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார். கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர்கள் மரு. என்.ஓ. சுகபுத்ரா (வருவாய்), எச்.எஸ்.ஸ்ரீகாந்த் (வளர்ச்சி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.