திருச்சிராப்பள்ளி, ஆக.10-
திருச்சிராப்பள்ளி ஜோசப் கல்லூரியில் பிந்துரா ஓவியக் கலைப் போட்டி நடை பெற்றது.
ஓவியக் கலையை ஸ்பானிஷ் மொழி யில் பிந்துரா என அழைப்பார்கள் இதனை தலைப்பாகக் கொண்டு பிந்துரா 2023 என்ற பெயரில் பள்ளி மாணவ மாணவிகளுக் கான ஓவியப் போட்டி திருச்சிராப்பள்ளி ஜோசப் கல்லூரியில் நடைபெற்றது .
விசுவல் கம்யூனிகேஷன் துறை மற்றும் கேம்ப்ளின் நிறுவனம் சார்பில் நடைபெற்ற போட்டியை கல்லூரி முதல்வர் ஆரோக்கி யசாமி சேவியர் துவக்கி வைத்தார். கல்லூ ரிச் செயலாளர் அமல், துணை முதல்வர் ராஜேந்திரன், நூடுல் அதிகாரி காணிக்கை ராஜ், விசுவல் கம்யூனிகேஷன் துறைத் தலைவர் தமிழரசி, கேம்பலின் நிறுவன மண்டல மேலாளர்கள் கங்கா பிரசாத், நவ நீதகிருஷ்ணன் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர். போட்டிகள் 5 மற்றும் 6 வகுப்பு, 7 மற்றும் 8 வகுப்பு, 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வெவ்வேறு தலைப்புகளில் நடத்தப் பட்டன.
இதில் 15 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு தங்களது ஓவியத் திறமையை வெளிப் படுத்தினர். வெற்றி பெற்ற மாணவ, மாணவி களுக்கு முருகவேல் சான்றிதழ் வழங்கி னார்.