districts

img

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம்

ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணினி துறை பெற்றோர் ஆசிரியர் சங்கக் கூட்டம் நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், கல்லூரி அமைப்பதற்கு வனத்துறைக்கு சொந்தமான வனத்தோட்ட கழகத்திற்கு கல்லூரி செலுத்த வேண்டிய இழப்பீட்டு தொகை ரூ.4,83,268-ஐ சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் தனது சொந்த பணத்தில் இருந்து வழங்கி சிறப்புரையாற்றினார். அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர் சங்க தலைவர் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்.

;