மயிலாடுதுறை, ஜூன் 14-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி முகாம் புதனன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவி யாளர் (பொது) மற்றும் கலால் உதவி ஆணையர் ஆர்.நரேந்திரன் தலைமை யில் நடைபெற்ற முகாமில் தரங்கம்பாடி வட்டத்துக்கு உட்பட்ட பெரம்பூர், கொடை விளாகம், திருவிளையாட்டம், நெடு வாசல், எரவாஞ்சேரி, கொத்தங்குடி, அரசூர், சேத்தூர், விளாகம், நல்லாடை ஆகிய வருவாய் கிராமங்களின் கணக்கு கள் சரிபார்க்கப்பட்டது.
முகாமில் மாவட்ட ஆட்சியர் அலுவலக மேலாளர் கா.முருகேசன், தரங்கம்பாடி வட்டாட்சியர் சரவணன், தனி வட்டாட்சி யர்கள் நாகலட்சுமி, சுந்தரி, வட்ட வழங்கல் அலுவலர் விஜயகுமார், பல்வேறு துறை யினர் கலந்துகொண்டனர்.