திருச்சிராப்பள்ளி, ஆக.22-
திருச்சி புறநகர் மாவட்டம், தா.பேட்டை ஒன்றியம் ஊரக்கரையில் உள்ள பெருக னூர் ஆதிதிராவிடர் காலனியில் பழுத டைந்த வீடுகளுக்கு பராமரிப்பு நிதி ஒதுக்க வேண்டும். சுடுகாட்டு பாதையை தார்ச் சாலையாக அமைத்துத் தர வேண்டும்.
சுடுகாட்டு கொட்டகை அமைத்து தர வேண்டும். தேவனூர் புதூர் விஏஓ அலுவல கம் முதல் பெருகனூர் வழியாக ஊரக்கரை வரை சுமார் 6 கி.மீட்டருக்கு மேல் உள்ள சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைத்து தார்ச் சாலையாக அமைத்து தர வேண்டும். ஊரக்கரை சித்திர புரத்தில் உள்ள வீடுகளுக்கு ஜல் ஜீவன் திட்டத்தில் குடிநீர் வழங்க வேண்டும்.
பெருகனூரில் துண்டிக்கப்பட்ட ஜல் ஜீவன் திட்ட குடிநீர் இணைப்பை மீண்டும் வழங்க வேண்டும். ஊரக்கரை பஞ்சா யத்தில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். நூறு நாள் வேலை திட்டத் தில், பயனாளர்களை சொத்து வரி, தண்ணீர் வரி கட்டுவதற்கு நிர்ப்பந்திப் பதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தா.பேட்டை ஒன்றியம், ஊரக்கரையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்க ஒன்றியத் தலை வர் தங்கராஜ் தலைமை வகித்தார். விவ சாயிகள் சங்க மாவட்டப் பொருளாளர் ராமநாதன், ஒன்றியச் செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர் சந்திரமோகன், சிஐடியு ஒன்றி யச் செயலாளர் முருகேசன், மாற்றுத்திற னாளி சங்க மாவட்ட துணை தலைவர் சுப்பிரமணியன், வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் பாலக்குமார், விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் செல்லப்பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் முசிறி துணை வட்டாட்சியர் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில், மேற்கண்ட கோரிக்கைகளை 3 மாதத்திற் குள் நிறைவேற்றி தருவதாக உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப் பட்டது.