districts

img

திருச்சி, கரூரில் ஜாக்டோ-ஜியோ ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ,2- முதலமைச்சர் தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங் களை நிரப்ப வேண்டும். சத்துணவு, எம்ஆர்பி செவிலியர்கள், ஊர்ப்புற நூலகங்கள் உள்ளிட்ட தொகுப்பூதிய, மதிப்பூதியத்தில் உள்ளவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் ல்வேறு, கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில்  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நீல கண்டன், நாகராஜன் உதுமான் அலி குமர வேல் பால்பாண்டி, பழனிச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட ஒருங்கிணைப் பாளர் பால் பாண்டி விளக்க உரையாற்றி னார். அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் பெரியசாமி நிறைவுரை யாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் 550க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  கரூர் ஜாக்டோ- ஜியோ கரூர் மாவட்டக்குழு சார்பில்  மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர்கள் பொன் ஜெய ராம், அன்பழகன் பெரியசாமி, தமிழ் மணியன்,  ஆரோக்கியா பிரேம்குமார், வேலு மணி ஆகியோர் தலைமை வகித்தனர். நூற்றுக்கணக்கான அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.