பொன்னமராவதி, ஆக.20 -
நாங்குநேரி சாதி வெறியாட்டத்தை கண்டித்தும், தந்தை-மகன் உட்பட 16 மாண வர்களை காவு வாங்கிய நீட் தேர்வை ஒன்றிய அரசு ரத்து செய்யக் கோரியும் தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னம ராவதி பேருந்து நிலையம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பி னர் நல்லதம்பி தலைமை வகித்தார். அமைப்பின் மாவட்டச் செயலாளர் ஜீவா னந்தம், மாவட்டத் தலைவர் சலோமி, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன், வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் மகாதிர் ஆகி யோர் கண்டன உரையாற்றினர்.