புதுக்கோட்டை, ஏப்.29- ஆதிதிராவிடர் மாணவர்களின் உயர் கல்வி சேர்க்கை விகிதத்தை உயர்த்தும் நோக்கத்தோடு, ‘கல்லூரி கனவு’ எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியை, மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கை யில், “ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி யினர் நலத்துறை சார்பில், ஆதிதிரா விடர் மாணவர்களின் நலனிற்காக எண் ணற்றத் திட்டங்கள் செயல்படுத்தப் பட்டு வருகின்றன. அதன்படி இன்று புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலை கல்லூரியில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணவர்களுக் கான ‘கல்லூரி கனவு’ எனும் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகமுள்ள படிப்புகள் குறித்தும், அப் படிப்புகளை வழங்கும் கல்வி நிறுவ னங்கள் குறித்த வழிகாட்டு ஆலோச னைகளும் வழங்கப்பட உள்ளன” என்றார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆதிதிரா விடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவ லர் க.ஸ்ரீதர், கோட்டாட்சியர் பா.ஐஸ் வர்யா, மாவட்ட வேலைவாய்ப்பு அலு வலர் மோ.மணிகண்டன், மாவட்ட மேலாளர் (தாட்கோ) எல்.அனிட் லிமலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.