districts

img

உழவர்கள்தான் காலம் காலமாக தமிழைக் காப்பாற்றி வந்துள்ளனர்

புதுக்கோட்டை, ஆக.1-

      வீட்டிலும், வயல்வெளிகளிலும் உழவர்கள் பேசிப் பேசித்தான் காலம் காலமாக தமிழை காப்பாற்றி வந்துள்  ளனர் என கவிஞர் நந்தலாலா தெரி வித்தார்.

     புதுக்கோட்டை புத்தகத் திரு விழாவில் ‘வணக்கம் வள்ளுவா’ என்ற தலைப்பில் திங்கள்கிழமை அவர் பேசியதாவது:

      வள்ளுவன் வாழ்ந்த காலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்  பாக இருக்கலாம். ஆனால், நமக்கு திருக்குறள் படிக்கக் கிடைத்தது வெறும் 211 வருடங்களுக்கு முன்பு தான். திட்டமிட்டு தமிழ்ப் பனுவல்கள்  எரிக்கப்பட்ட காலத்தில், சமையற் காரர் கந்தசாமிப் பிள்ளையின் கை யில் திருக்குறள் ஓலைச்சுவடி கிடைத்  தது. அது அப்போதைய ஆங்கிலேய  கவர்னர் எல்லீஸிடம் கொடுக்கப்பட் டது. அவரால்தான் அச்சுவடி மூலம் நமக்கு திருக்குறள் கிடைத்தது. எல்லீஸ் இல்லையென்றால் இப் போது நாம் கொண்டாடும் திருக் குறள் இல்லை.

     நம்மை ஆண்ட பல மன்னர்கள்  ஆங்கிலம், தெலுங்கு, உருது மொழி களைத்தான் ஆட்சிமொழியாக வைத்திருந்தனர். அப்படியென்றால் இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழ் எப்படி வாழ்கிறது. வயல்வெளியில் உழுது கொண்டிருந்த உழவர்கள் பேசிப் பேசித்தான் தமிழ்மொழியை காலம் காலமாகக் காப்பாற்றி வந்  துள்ளனர். இரண்டாயிரம் ஆண்டு களுக்கு முன்பாக இருந்த வேர்ச் சொற்கள் இன்னும் உயிரோடு இருப்  பதற்கு இதுவே காரணம்.

     பிறரின் துன்பத்தை தன் துன்ப மாகக் கருதுவதுதான் அதிகபட்ச அறிவு. தனக்கு துன்பம் செய்பவன் வெட்கப்படும் வகையில், அவருக்கு  நன்மை செய்துவிடச் சொன்னவர் திருவள்ளுவர். மனதால் செய்வது தான் பெரிய குற்றம் என்ற மேற்குலக நாடுகள் வடிவமைத்த சட்டங்க ளுக்கு முன்பே, அதனைச் சொன்ன வர் திருவள்ளுவர். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற ஆகப பெரிய சமூக நீதியைச் சொன்னவர் அவர்.

     குடும்பத்தினர்கூட ஏதோ ஒரு வகையில் நிபந்தனைக்குட்பட்டுத் தான் அன்பைத் தருபவர்களாக இருக்கின்றனர். பயன் எதையும் எதிர்  பாராமல் கொடுக்கும் அன்புக்குப் பெயர்தான் கருணை என்பதை அப்போதே சொன்னவர் வள்ளுவர்.

    திருக்குறள் என்பது வெறுமனே மனப்பாடப் பாடல் அல்ல; தமிழ்ச் சமூகத்தின் சிந்தனை முறையை தமி ழுக்குத் தந்தவர் வள்ளுவர். ‘பிறப் பொக்கும் எல்லா உயிர்க்கும்’ போன்ற  நவீன சிந்தனைகளை இரண்டாயி ரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்த  வள்ளுவர், நல்லது செய்பவன் துன் பப்படுவதும், கெட்டது செய்பவன் சந்தோசமாக இருப்பதும் எப்படி என விடைதெரியாமல் தவித்தார். அதற்குக் காரணம், சுரண்டல் என கண்டுபிடித்துச் சொன்னவர் காரல் மார்க்ஸ்.

    மொழியை எப்போதும் புதுப் பித்துக் கொண்டே இருக்க வேண் டும். உலகச் சிந்தனைகளை உள்ளூ ருக்கு கொண்டு வந்து தருவது தான் இதுபோன்ற புத்தகத் திரு விழாக்கள்.

இவ்வாறு நந்தலாலா பேசினார்.

கவிதை நூல் வெளியீட்டு விழா

    புதுக்கோட்டை 6 ஆவது புத்தகத்  திருவிழாவின் நான்காம் நாளான திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வுக்கு ஜி.முருகராஜ் தலைமை வகித்தார். கவிஞர் நந்தலாலா, வழக்கறிஞர் த.இராமலிங்கம் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். புதுகை பிலிம் சொசைட்டி நிறுவனர் எஸ். இளங்கோ, எழுத்தாளர் அண்ட னூர் சுரா, பழ.குமரேசன் உள் ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். விழா வில் கவிஞர் சாமி கிரீஷ் எழுதிய ‘சருகு துளிர்காலம்’ என்ற கவிதை  நூல் வெளியிடப்பட்டது. நூலின்  முதல் பிரதியை கவிஞர் நந்தலாலா  வெளியிட, கவிஞர் தங்கம்மூர்த்தி,  புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பா ளர் அ.மணவாளன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.