புதுக்கோட்டை ஜன.11:- மீனவர்களை பாதுகாக்க வேண்டியது ஒன்றிய அரசின் கடமை என்று மாநில மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் வியாழக் கிழமை அவர் செய்தியாளர் களுக்கு அளித்த பேட்டி விவரம்:- புதுக்கோட்டை மாவட்டம் கந் தர்வகோட்டை அருகே உள்ள மங்கனூரில் 78 ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள பல்நோக்கு கடற்பாசி பூங்கா மூலம் 10 ஆயிரம் பெண்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள். இங்கு கடலோரப் பகுதிகளில் தயார்ப்படுத்தக்கூடிய கடற்பாசியை மதிப்பு கூட்டி தரம் உயர்த்துவதற்கான நடைமுறைப் படுத்தப்பட உள்ளது. மேலும் இங்கு அமைய உள்ள கடற்பாசி பூங்கா அப்பகுதி விவசாயி களுக்கும் பொதுமக்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் அமைக்கப்படும். மீனவர்களுக்கு ஏற்கனவே வாக்கி டாக்கி வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சாட்டிலைட் போன் டிரான்ஸ்பார்ம் உள்ளிட் டவைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் தேவைப்படுபவர்களுக்கு வாக்கி டாக்கி வழங்க தயாராக இருக்கின்றோம். மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் கால நிவாரணம் ஐயாயிரத்தி லிருந்து 6 ஆயிரமாக உயர்த்தப்பட் டுள்ள நிலையில், ராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர்கள் மாநாட் டில் அதை 8 ஆயிரமாக உயர்த்த மீனவர்கள் கோரிக்கை வைத்துள் ளனர். அதனை வரக்கூடிய காலங் களில் நாம் வழங்க உள்ளோம். அதேபோல் டீசல் மண்ணெண்ணெ யும் மீனவர்களுக்கு கூடுதலாக வழங்க உள்ளோம். மீனவர்களுக்கு கடுமையான பாதிப்பு தான். மீனவர்களின் வாழ்வாதாரம் கெட்டுப்போய்தான் உள்ளது. ஆனால் ஒன்றிய அரசிட மிருந்து வரக்கூடிய அமைச்சர்கள், அதிகாரிகள் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களின் படகுகளை இலங்கை அரசிடம் மீட்போம் மீட் போம் என்று கூறிக் கொண்டேதான் இருக்கிறார்கள். நமது தமிழ்நாடு அரசை பொறுத்தவரை படகை யும் மீட்க வேண்டும். சிறைபிடிக்கப் பட்ட மீனவர்களையும் விடுவிக்க வேண்டும் என்பதுதான் கோரிக்கை. ஆனால் படகை பிடித்து வைத்துக் கொண்டு மீனவர்களை மட்டுமே அனுப்பி வைத்து வருகிறார்கள். மீனவர்களின் படகை மீட்பதற்கு விரைவில் இலங்கை குழுவும் நமது குழுவும் சந்தித்து பேசி படகை மீட்க தமிழ்நாடு முதல மைச்சர் முயற்சிகளை மேற் கொண்டு வருகிறார். ஒன்றிய அரசின் தேர்தல் வேஷம் மீனவர்களை ஏமாற்றுவதற் காக உடனடியாக படகுகளை மீட்போம் கச்சத்தீவை மீட்போம் என ஒன்றிய அரசிலிருந்து வருப வர்கள் தேர்தல் வேஷம் மட்டுமே போடுகிறார்கள். இதுவரை படகை மீட்கவில்லை. படகை மீட்க வேண்டும் என்றால் ஒன்றிய அரசு தான் மீட்க வேண்டும். நாங்கள் ஒன்றிய அரசிடம் பேசி வெளியுறவுத் துறை அமைச்ச ருக்கு அழுத்தம் கொடுத்து இலங்கை அரசிடம் பேசி தான் படகு களை மீட்க முடியும். இதை ஒன்றிய அரசு தான் செய்ய வேண்டும்
இதற் கான அழுத்தத்தை தமிழ்நாடு முத லமைச்சர் தொடர்ந்து கொடுத்து கொண்டு இருக்கிறார். கச்சத்தீவை மீட்க ஏற்கனவே தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முதலமைச்சரும் உச்சநீதிமன்றத் தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என்பதுதான் திமுகவின் கருத்து. அந்த வகையில் மீட்டு தர வேண்டியது ஒன்றிய அரசாங்கம் தான். மழைக்காலத்தில் திடீரென்று எண்ணூர் துறைமுகம் முகத்துவாரத் தில் எண்ணெய் கழிவு கலந்து விட்டது அதை சுற்றுச் சூழல் துறை மூலம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்தக் கழிவுகள் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது. அரசு இயந்திரம் முழுவீச்சில் செயல்பட்டு தூத்துக்குடி, திரு நெல்வேலி மாவட்டங்களில் மீட்பு பணிகள் நடைபெற்றது விரைவில் அந்த மாவட்டங் கள் அனைத்து பணிகளும் முடி வடைந்து இயல்பு நிலைக்கு திரும்பும். பால் உற்பத்தியாளருக்கு எவ்வளவு கறவை மாடுகள் கொடுக்க வேண்டுமோ அவ்வ ளவு மாடுகளையும் வழங்க தமிழ்நாடு முதலமைச் சர் அறிவுறுத்தியுள்ளார். மூன்று சதவீதம் 4 சதவீதம் வட்டியில் மாடுகளை வழங்கி வருகிறோம். பால் உற்பத்தி யை பெருக்க அனைத்து நட வடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் முன்பதிவால் காளைகளுக்கு என்ன பாதிப்பு இருக்க போகிறது. அதில் பாதிப்பு இருந்தால் அதற்கான கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.