தஞ்சாவூர், ஜூலை 28-
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே ஒட்டங்காடு ஊராட்சியில், பழங்குடி ஆதியன் இன மக்களுக்கு வீடு கட்ட ஆணை வழங்கும் நிகழ்ச்சி, ஊராட்சி மன்றத் தலைவர் ராஜாக்கண்ணு தலை மையில் நடைபெற்றது.
வட்டார வளர்ச்சி அலு வலர் செல்வேந்திரன் முன் னிலை வகித்தார். நிகழ்ச்சி யில் பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 37 பயனாளி களுக்கு, வீடு கட்ட ஆணை களை வழங்கிப் பேசினார்.
நிகழ்வில், ஒட்டங்காடு கிராமத்தில் சாலை ஓரத்தில் வசித்து வரும் ஆதியன் இன பழங்குடியின மக்கள் 37 பேருக்கு அண்மையில் மனைப் பட்டா வழங்கப்பட் டது. அந்த இடத்தில் வீடு கட்ட பயனாளி ஒருவருக்கு தலா ரூ.4 லட்சத்து 62 ஆயிரம் வீதம், 37 பயனா ளிகளுக்கும், ரூ.1 கோடியே 70 லட்சத்து 94 ஆயிரம் வழங் கப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.