districts

வேலைவாய்ப்பு முகாம் பணி ஆணை வழங்கல்

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வானவர்களக்கு பணி  நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா சனிக்கிழமை  வழங்கினார்.  டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுக் கோட்டை மாவட்டத்தில் இரண்டு தனியார் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு நேர்காணல்  நடத்தப்பட்டு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படுகின்றன. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்  இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டு மென ஆட்சியர் தெரிவித்தார்.