திருச்சிராப்பள்ளி, ஜூன் 10-
தென்னூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு பகுதிக் குழு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு பகுதி செயலாளர் ரபீக்அஹமது தலைமை வகித்தார். உறுப்பினர்களுக்கு அடையாள அட்டையை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ராமச்சந்தி ரன், மாவட்டக் குழு உறுப்பினர் அன்வர்உசேன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். இதில் பகுதிக் குழு உறுப்பி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.