districts

img

‘‘புதுமைப்பெண் திட்டம்’’ மாணவிகளுக்கு வங்கி பற்று அட்டைகள் வழங்கல்

பெரம்பலூர், பிப்.9-  பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் ‘‘புதுமைப்பெண் திட்ட’’த்தின் கீழ் அரசு பள்ளியில் பயின்று உயர்க்கல்வி படித்து வரும் 681 மாணவிகளுக்கு இரண்டாம் கட்டமாக மாதம் ரூ.1,000 வீதம் வங்கி பற்று அட்டைகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் புதனன்று வழங்கினார்.  பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.ஷ்யாம்ளா தேவி மற்றும் மாவட்ட ஊராட்சிக்குழுத்தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ருவாய் கோட்டாட்சியர் ச.நிறைமதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அரியலூர் அரியலூர் அடுத்த வாலாஜா நகரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்து, 445 மாணவிகளுக்கு மாதம் உதவித் தொகை ரூ.1,000 வீதம் பற்று அட்டையை வழங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப்பா முன்னிலை வகித்தார். மாவட்ட சமூக நல அலுவலர் பூங்குழலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.