புதுக்கோட்டை, அக்.28 - கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடை பெற்றது. மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற முகாமினை சுற்றுச் சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்து பணிநியமன ஆணைகளை வழங்கி னார். மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, இணை இயக்குநர் (வேலை வாய்ப்புத் துறை) சந்திரன், பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம், ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, கோட்டாட்சியர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.