districts

img

இஸ்லாமியர்கள் ஒன்றிய அரசு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம்

கர்நாடகா மாநிலத்தில் உள்ள கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு தடை விதித்த நீதிமன்றத்தின் அநீதியான தீர்ப்பை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டைப்பட்டினம் கடைவீதியில் 300-க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றிய அரசு மற்றும் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர், எஸ்டிபிஐ கட்சி மாநில பொறுப்பாளர் உமர், கண்டன உரையாற்றினர். கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்துகொண்டனர்.