தமிழகம் முழுவதும் 2 கோடியே 21 லட்சத்து 83 ஆயிரத்து 661 குடும்ப (ரேஷன்) கார்டுதாரர்கள் இருக்கிறார்கள். 35 ஆயிரத்து 87 ரேஷன் கடைகள் மூலமாக, ஒரு கோடிக்கு அதிகமான கார்டுதாரர் களுக்கு இலவசமாக அரிசி விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை போன்றவை புழு, பூச்சி களுடன் தரமற்ற நிலையில் இருப்பதாக முதல்வர் கவனத்துக்கு பொது மக்கள் கொண்டு சென்றனர். இதையடுத்து ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு அத்தியா வசிய பொருட்கள் சரியான அளவில், தரமாக கிடைப்பதை உறுதி செய்ய, ஆட்சி யர்கள் உணவு வழங்கல், கூட்டுறவு அதிகாரி கள் மாதந்தோறும் ஆய்வு செய்ய தொடங்கி யுள்ளனர். ரேஷன் கடையின் தகவல் பலகையில், கடையின் பெயர், பணி நேரம், ஊழியர் பெயர் ஆகியவற்றுடன் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, விலை, விநியோ கம் பற்றிய விவரங்கள் எழுதப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்; உதவி கமிஷனர், வட்ட வழங்கல் அதிகாரி கள், ரேஷன் கடைகளில் ஆய்வு செய்யும் போது, தரம் குறைவான பொருட்கள் இருந் தால், அவற்றை உடனே கிடங்குகளுக்கு அனுப்பிவிட்டு, தரமான பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொருட்கள் இருப்பை சரிபார்க்க வேண்டும்.
இவை அனைத்தும் பெயரளவுக்குதான் நடப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து தலைமைச் செயலர் சென்னையில் நேரடி யாக கள ஆய்வு செய்தார். மாநிலம் முழு வதும் நுகர்பொருள் வாணிபக் கழக அதி காரிகள் ஆய்வு நடத்தினர். இதில் தரமான பொருள் மக்களுக்கு விநியோகிக்கப்பட வில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இத னால், ரேஷன் கடை ஊழியர்கள் பலரும் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். உண்மையில், உணவு வழங்கல் துறை, கூட்டுறவு துறை, நுகர்பொருள் வாணிபக் கழகம் ஆகிய 3 துறைகளிடமும் ஒருங்கி ணைப்பு இல்லாததால், ரேஷனில் தரமற்ற பொருட்கள் வழங்குவது உள்ளிட்ட புகார் கள் அதிகரித்து வருகிறது. ரேஷன் விநி யோகம் தொடர்பாக, மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் நடத்து கின்றனர். இதுதவிர இப்போது, அனைத்து மாவட்டங்களிலும் தலா 4 அதிகாரிகள் அடங்கிய கண்காணிப்பு குழுவை நிய மித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவில் மாவட்ட வழங்கல் அலுவலர், வாணிப கழக முதுநிலை மண்டல மேலா ளர், கூட்டுறவு துறை மண்டல இணைப் பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி ஆகியோர் இடம் பெற்றிருப்பர். குழு ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படு வார். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக, காவிரி டெல்டா பகுதியான தஞ்சை, திருவா ரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்கள் இருந்து வருகின்றன.
நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் மூலம் விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல் கொள்முதல் செய்யப்படு கிறது. இந்த நெல் மூட்டைகள் அரசு மற்றும் தனியார் அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அங்கு அரவை செய்யப் பட்டு அரிசி தயாராகிறது. இந்த அரிசி, மூட்டைகளில் எடைபோடப்பட்டு, நுகர்பொ ருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொது விநியோக திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் ரேஷ னில் வழங்கப்படும் அரிசி, பெரும்பாலும் தர மாக இருப்பதில்லை கள், குருணை, பழுப்பு நிறத்தால் தரமற்ற வகையில் வழங்கப்படு வதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த நிலைக்கு முடிவு கட்ட நுகர்பொ ருள் வாணிய கழகத்துக்கு சொந்தமான அரிசி அலைகளில், நவீன எந்திரங்களை பொருத்தி, கல், குருணை மற்றும் பழுப்பு நிறத்தை நீக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தமிழகத்தில் மொத்தம் உள்ள 23 நவீன அரிசி ஆலைகளில் ஏற்கனவே 6 ஆலை களில் தலா ரூ.43 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள் ளன. மேலும் திருவண்ணாமலை மாவட்டத் தில் செய்யாறு, போளூர் உட்பட நவீன அரிசி ஆலைகளில் புதிய எந்திரங்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
இது தொடர்பாக, கூட்டுறவு மற்றும் உணவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழக குடிமைப்பொருள் வழங்கல் கழகத்தின் 21 நவீன அரிசி ஆலை கள் மூலம் 47 ஆயிரம் மெட்ரிக் டன் மாதாந்திர ஹல்லிங் திறன் கொண்டது. 15 ஆலைகளில் புழுங்கல் அரிசியும் மற்ற 6 ஆலைகளின் மூலம் அரிசி உற்பத்தி செய்யப் படுகிறது. அரிசியின் உமிழும் திறன், தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்த ஆலைகள் படிப்படியாக நவீனப்படுத்தப் படுகிறது. இதில் 7 நவீன அரிசி ஆலைகள் முதல் கட்டமாக ரூ.26.27 கோடி செலவி லும், மேலும் 7 நவீன அரிசி ஆலைகள் இரண்டாம் கட்டமாக ரூ.32.60 கோடி யில் நவீனமயமாக்கப்பட்டு பணிகள் முடிவடை யும் நிலையில் இருக்கிறது. மீதமுள்ள 7 நவீன அரிசி ஆலைகளின் நவீனமயமாக்கல் ரூ.36 கோடி செலவில் மூன்றாம் கட்டமாக நடக்க உள்ளது. பழைய அரிசிகளின் இருப்பை, காலாவதி தேதிக்குள் மக்களுக்கு சென்ற டைய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள் ளது என்றார். இவைகள் முழுமையாக நடை பெற்று முடிந்தால் நிலைமைகளை சரி செய்யமுடியும்.
- ஆரூரான்