districts

img

அதிக வெப்பத்தால் புளிய மரத்தில் தீ பற்றியதா?

அரியலூர், மே 4 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்-மதனத்தூர் சாலையில் பிஎஸ்என்எல் அலு வலகம் எதிர்ப்புறம் நெடுஞ்சாலை துறைக்கு  சொந்தமான புளியமரம் ஒன்று சாலை ஓரத்தில் உள்ளது. இந்த மரத்தின் உள் பகுதியில் இருந்து நண்பகல் நேரத்தில் திடீ ரென புகை வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மரத்தின் அருகே சென்று பார்த்த போது  புளியமரத்தின் அடிப்பகுதியில் இருந்து  மேல் பாதி தூரம் வரை, உள்பகுதியில் குடைந்து மரித்து போன நிலையில் இருந்தது.  இந்த மரத்தின் அடிப்பகுதியில் கிடந்த குப்பையின் மீது யாரேனும் புகைத்து விட்டு  சிகரெட் அல்லது பீடி நெருப்பை போட்டார் களா அல்லது எவரேனும் குப்பையை கொ ளுத்தினார்களா அல்லது வெயிலின் தாக்கத்தால் வெப்பம் அதிகரித்து தானாக தீப்  பற்றிக் கொண்டதா என்பது புதிராக உள்ளது.  இந்நிலையில், அப்பகுதியில் வாட்டர் சர்வீஸ் கடை நடத்தி வரும் நீலமேகம் என்ப வர் தனது வாட்டர் சர்வீஸ் பைப் மூலம் மரத்தின் உள்பகுதியில் தண்ணீரை அடித்து  தீயை அணைக்க முயன்றார். இருப்பினும் அது பலனளிக்கவில்லை.  இதையடுத்து நீலமேகம், ஜெயங்கொண் டம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா  தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், மரத்தின் உள்பகுதியில் இருந்து புகை வந்த  வழியாக தண்ணீர் பீய்ச்சி அடித்து நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.