districts

img

கண்ணாடி அணிவதை தவிர்க்க காண்டூரா லேசிக் நவீன சிகிச்சை

திருச்சிராப்பள்ளி, ஏப்.4 - திருச்சி ஜோசப் கண் மருத்துவ மனை இயக்குநர் பிரதீபா, துணை இயக்குநர் அகிலன் அருண்குமார், மருத்துவர் பிரக்யா பார்மர், லேசிக் அறுவை சிகிச்சை நிபுணர் மரு.அக்க்ஷயா, மருத்துவர் பிரியா மற்றும் நிர்வாக அதிகாரி சுபா பிரபு ஆகி யோர் செய்தியாளர்களிடம் கூறியதா வது:  தற்போது அனைத்து வயதினரும் கண் குறைபாட்டால் பாதிக்கப்பட்டு கண்ணாடி அணிந்து வருகின்றனர். அத னால் சிலருக்கு கண் சோர்வு, தலை வலி உள்ளிட்டவை ஏற்படுகிறது. தற்போது அவர்கள் கண்ணாடி அணி வதை தவிர்க்க முதன் முறையாக காண்டூரா லேசிக் என்னும் நவீன தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப் பட்டுள்ளது. இதில் பல்வேறு சிறப்பம் சங்கள் உள்ளன.  குறிப்பாக இதன் மூலம் அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற் கொண்டு பார்வை திறனை மேம்படுத்த  முடியும். மேலும் பக்க விளைவுகள், இரவு நேரத்தில் ஏற்படும் கண்கூச்சம் போன்றவற்றை குறைக்க முடியும். இந்த தொழில்நுட்பத்தின் மூலம் கண்  கருவிழியில் உள்ள 22  ஆயிரத்திற்கும் மேற்பட்ட புள்ளிகளை துல்லியமாக கண்டறிந்து, அதனை ஆய்வு செய்து, குறைபாடுகளை மிக நேர்த்தியாக சரி செய்ய முடியும்.  இதில் சிகிச்சை பெறுபவர்களின் கருவிழி, கணினி மூலம் கண்காணிக் கப்படுகிறது. இது சிக்கலான பார்வை  பிரச்சனை உள்ளவர்களுக்கு பய னுள்ளதாக இருக்கும். இந்த சிகிச்சையை  18 வயதுக்கு மேல் உள்ள அனை வரும் செய்து கொள்ளலாம். குறிப்பாக  சிலருக்கு கண் கருவிழியில் முறையற்ற  பிறழ்வுகள் இருக்கும். அதனை கண்ட றிந்து சரி செய்வதே இந்த தொழில் நுட்பத்தின் சிறப்பம்சம். மேலும் காண்டூரா அறுவை சிகிச்சை செய்வதன்  மூலம் கண் பார்வை திறனை அதிகப் படுத்த முடியும்.  இவ்வாறு அவர்கள் கூறினர்.