districts

பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம்

தூத்துக்குடி, ஜூன் 5

    தூத்துக்குடி மாவட்டத் தில் பெண் குழந்தை களை பாலியல் குற்றங்க ளிலிருந்து பாதுகாத்திட வாட்ஸ்அப் எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

     சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவின் பேரில், சமூகத்தில் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் பெண் குழந்தைகள், மாண வியர்களை பாதுகாத்திடும் நோக்கத்தில் வாட்ஸ்அப் எண் 6374810811 தொடங் கப்பட்டுள்ளது. பெண் குழந் தைகள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கள்( ம) பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த புகார்களை 24 மணி நேரமும் பதிவு செய்யலாம்.

    புகார் தொடர்பாள விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு, உரிய நட வடிக்கை எடுக்கப்படும். பெண்கள் தங்களுக்கு எதிரான குற்றச்செயல்கன், குழந்தை திருமணம் தடுத்தல், பள்ளி கல்வியில் இடைநிற்றலை தடுத்து தொடர்ந்து கல்வி பயில்வ தற்கு ஏற்பாடு செய்து கொடுத்தல் என அனைத்து குற்ற நிகழ்வுகளையும் இந்த எண்ணில் பதிந்து உட னடியாக தீர்வு காண லாம் என மாவட்ட குழந்தை கள் பாதுகாப்பு அலுவலர் எல்.அலெக்ஸ் தெரிவித் துள்ளார்.