திருச்சிராப்பள்ளி, அக்.12 - இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐஆர்சிடிசி தென்மண்டல குழு பொது மேலாளர் ராஜலிங்கம்பாசு திருச்சியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியன் ரபில்வேயின் சுற்றுலா பிரி வான ஐஆர்சிடிசி-யானது சுற்றுலாப் பய ணிகளுக்காக பிரத்யேக ‘பாரத் கௌரவ் சுற்றுலா’ ரயிலை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் 14 பெட்டிகள் உள்ளன. ஐஆர்சிடிசி தென் மண்டலம் சார்பில் தென்காசியில் இருந்து ‘தீபாவளி கங்கா ஸ்னான சிறப்பு யாத்திரை’ என்ற பெய ரில் சுற்றுப் பயணம் அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. இதில் பயணிகள் தீபாவளி அன்று காசி யின் கங்கை நதியில் நீராடலாம். பின்னர் இராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமியை தரி சனம் செய்யும் வகையில் திட்டமிடப் பட்டுள்ளது. இந்த சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து புறப்பட்டு இராஜபாளையம், சிவ காசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, திரி வேணி சங்கமம் (அலகாபாத்), கயா மற்றும் இராமேஸ்வரம் சென்று வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுப்பயணம் நவம்பர் 9 அன்று தொடங்கி நவம்பர் 17 அன்று நிறைவடை யும். ஒரு நபருக்கு படுக்கை வசதியுடன் கட்ட ணம் ரூ.16,850, 3 ஏசி படுக்கை வசதியுடன் கட்டணம் ரூ.30,500 ஆகும். சுற்றுலா பயணி களுக்கு தங்கும் இடம், உள்ளூரைப் பார்வை யிடுவதற்கான போக்குவரத்து வசதி, தென்னிந்திய சைவ உணவு, சுற்றுலா மேலா ளர் மற்றும் தனியார் பாதுகாவலர் வசதி, பயண காப்புறுதி ஆகியவை செய்து தரப் படும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது வட்டார மேலாளர் பாஷித்அஹமது உடனிருந்தார்.