districts

img

தமிழில் பெயர்ப் பலகை: நாளை விழிப்புணர்வு நிகழ்ச்சி

மயிலாடுதுறை, ஜன.31 -  மயிலாடுதுறை காவேரி நகர் ஆரோக்கிய நாதபுரத்தில் மாயூரம் முன்சீப் வேதநாயகம் பிள்ளைக்கு ரூ.3 கோடி மதிப்பீட்டில் அரங்கம்  கட்டுமானப் பணிகள் நடந்து வருவதை தமிழ்  வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் செவ்வாயன்று ஆய்வு செய்தார்.  பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறு கையில், கவிஞர் வேதநாயகம் பிள்ளைக்கு சிலை மற்றும் அரங்கம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்ததை அடுத்து  செய்தித்துறை சார்பில் ரூ.3 கோடி மதிப்பீட் டில் அரங்கம் அமைக்கும் பணி நடந்து வரு கிறது. தமிழகத்தில் சுதந்திரப் போராட்ட வீரர் கள், தமிழ்மொழி தியாகிகள், மக்களுக் காக உழைத்த தலைவர்களின் சிலைகள்  அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுப் பணித்துறை மூலம் நடைபெறும் இப்பணியில் மக்கள் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் ஒருசில மாற்றம்  செய்யலாமா என்று ஆலோசிக்கிறோம். இந்த அரங்கு, மக்கள் பயன்பாடு மற்றும் அரசு நிகழ்ச்சிகள் நடத்தும் நோக்கில் அமைக்கப்பட்டு வருகிறது. வணிக நிறுவனங்களில் பெயர் பல கையில் தமிழ் கட்டாயம் இருக்க வேண்டுமென்று சட்டம் இருக்கிறது. இது குறித்து பிப்.2 அன்று மக்களிடம் விழிப்பு ணர்வு ஏற்படுத்த உள்ளோம். தொடர்ந்து  பிப்ரவரி முதல் வாரத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, தொழிலாளர் துறை சார்பில் ஆய்வு செய்து, தமிழில் பெயர்ப் பலகைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தில்லையாடி வள்ளியம்மை நினைவு மணி மண்டபத்தை வரும் நிதியாண்டில் சீரமைப் பதற்கு நிதிநிலைக்கு ஏற்ப விரைவில் நட வடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, ராம லிங்கம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் நிவேதா முருகன், ராஜகுமார், பன்னீர்செல்வம், நக ராட்சி தலைவர் செல்வராஜ் மற்றும் அதிகாரி கள் உடனிருந்தனர்.