புதுக்கோட்டை, மார்ச் 13 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்கம், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு (சிஐடியு) ஆகிய அமைப்புகள் இணைந்து உலக மகளிர் தின விழாவை புதுக்கோட்டை யில் புதன்கிழமை நடத்தின. விழாவிற்கு மாதர் சங்க மாவட்டச் செயளாளர் பி.சுசிலா தலைமை வகித் தார். விழாவில், ககந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ரும், அகில இந்திய விவசாயத் தொழி லாளர் சங்க மாநிலத் தலைவருமான எம்.சின்னதுரை, சிஐடியு மாநிலச் செயலாளர் எம்.ஐடாஹெலன் ஆகி யோர் சிறப்புரையாற்றினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பாண்டிச் செல்வி, அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஏ.சி.செல்வி, மாவட்டத் தலைவர் விஜயலெட்சுமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட துணைத் தலைவர் எம்.சண்முகம் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக அங்கன்வாடி ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் ரேவதி வரவேற்க, மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் இளவரசி நன்றி கூறினார்.