districts

img

சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப சர்வதேச கருத்தரங்கம்

கும்பகோணம், ஏப்.20- தஞ்சாவூர் மாவட் டம் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழக, சீனிவாச ராமா னுஜன் மையத்தில் கணிப்பொறி அறிவியல் துறை சார்பாக பாதுகாப்பான கணினி மற்றும் அறிவார்ந்த தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சீனிவாச இராமானு ஜன் மைய புலத்தலைவர் இராமசாமி தலைமை வகித்தார். இணை புலத்தலைவர்  அல்லிராணி துவக்கவுரை ஆற்றினார். இக்க ருத்தரங்கை இந்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பின் (DRDO)விஞ்ஞானி ஜெயபிரதா கணேஷ்  துவக்கி வைத்து பாதுகாப்பு பயன்பாடுகளில் செயற்கை நுண்ணறிவின் பயன்கள் என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்.  தொடர்ந்து சென்னை இந்திய தொழில் நுட்ப கழக பேராசிரியர் சந்திரசேகர் “ஒளிப் படம், வீடியோ மற்றும் உரை செயலாக்கப் பணிகளுக்கான ஆழமான கற்றல் மாதிரிகள்” என்ற தலைப்பிலும் அயர் லாந்து கால்வே பல்கலைக்கழக பேராசிரியர்  பாரதிராஜா அசோக் “சக்ரவர்த்தி வலைதள  சுட்டுரையில் திராவிட மொழிகளின் வெறுப்பு  பேச்சுகள்” என்ற தலைப்பிலும் தில்லி இந்திய தொழில்நுட்ப கழக பேராசிரியர் இரவி பாபு முலவிசாலா, “அகச்சிவப்பு ஒளிப்படங்க ளின் சமீபத்திய போக்குகள்” என்ற தலைப்பி லும் ஆய்வு உரையாற்றினர். இக்கருத்தரங்கில் தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, உத்தரப்  பிரதேசம், குஜராத் ஆகிய மாநிலங்களி லிருந்து 254 மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டு 93 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.