திருவாரூர், பிப்.4 - கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழக கல்வித் துறையின் கல்வி மற்றும் பயிற்சிப் பள்ளி, “பல்வேறு பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்துதல் 2024” (EDGE 2024) என்ற சர்வதேச மாநாடு திருவாரூரில் நடைபெற்றது. பல்கலைக் கழக துணைவேந்தர் பேரா. எம்.கிருஷ்ணன் சர்வதேச மாநாட்டைத் துவக்கி வைத்து தலைமை உரையாற்றினார். பதிவாளர் இரா.திருமுருகன் நிறைவுரையாற்றினார். இந்த மாநாட்டில் வங்கதேசத்தின் டாக்கா பல்கலைக்கழகத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த பேராசிரியர் மோனினூர் ரோஷித் மற்றும் காந்திகிராம கிராமப்புற நிறுவனத்தின் கல்வித் துறையைச் சேர்ந்த பேராசிரியர் ஜஹிதா பேகம் உள்ளிட்டோரின் சிறப்பு விரிவுரைகள் இடம்பெற்றன. பேராசிரியர்கள் சீனிவாசன், வெங்கட்ராமன், டாக்டர் பீமப்ப ரங்கண்ணவர், டாக்டர் பூர்ணிமா ராஜேந்திரன், டாக்டர் பிரமிளா ரமணி மற்றும் சுனில்குமார் உள்ளிட்டோர் மாநாட்டு ஒருங்கிணைப்புகளை செய்திருந்தனர்.