நாகர்கோவில், ஏப்.21- கேரளத்தில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் தமிழகத்துக்குள் பரவாமல் தடுக்க தமிழக-கேரள எல்லையில் கண்கா ணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக குமரி மாவட்டம் தமிழக-கேரள எல்லையில் இருப்பதால் இந்த பகுதியில் உள்ள சோதனைச் சாவடிகளில் கண்கா ணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்துவா, சேர்த்தலா உள்ளிட்ட பகுதி களில் செயல்பட்டு வரும் பண்ணைகளில் வாத்துகள் திடீரென்று பெருமளவில் உயிரி ழந்தன. இறந்த வாத்துகளை பரிசோதனை செய்ததில் எச் 5 என் 1 பறவை காய்ச்சல் தாக்கியிருப்பது கண்டறியப்பட்டது. இத னைத் தொடர்ந்து கேரளாவில் இருந்து குமரி மாவட்டத்திற்கு இறைச்சி கோழி, முட்டை கொண்டு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்க படந்தாலுமூடு சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சோதனை சாவடியில் கால்நடை மருத்து வர், கால்நடை ஆய்வாளர், உதவியாளர் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 3 குழுக்களாக 24 மணி நேரமும் கண்காணிக் கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள் ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கேர ளத்தில் இருந்து கோழிகள் கொண்டுவரும் வாகனங்கள் திருப்பி விடப்படுகிறது. தமிழ கத்தில் இருந்து கேரளா சென்றுவிட்டு வரும் கோழிப்பண்ணை சார்ந்த வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. மேலும் குமரி – கேரள எல்லை பகுதிகளில் உள்ள கோழிப்பண்ணைகளிலும் ஆய்வுகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகள் கூட்டமாக இறந் தால் தகவல் தெரிவிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளனர்.