districts

img

இன்சூரன்ஸ் தேசவுடைமை நாள் சிறப்புக் கருத்தரங்கம்

திருச்சிராப்பள்ளி, மே 20-

     அரசு பொது இன்சூரன்ஸ் அதிகாரிகள், வளர்ச்சி அதிகாரிகள், ஊழியர்களின் தொழிற் சங்கங்கள் மற்றும் நலச் சங்கங்கள் கூட்ட மைப்பு சார்பில் பொதுத்துறை பொது இன்சூ ரன்ஸ் தேசவுடைமை நாள் சிறப்பு கருத்த ரங்கம் திருச்சியில் நடைபெற்றது.  

   கருத்தரங்கிற்கு யுனைடெட் இந்தியா இன் சூரன்ஸ் அதிகாரிகள் சங்க அமைப்புச் செயலாளர் ஸ்ரீதரன் தலைமை வகித்தார். கூட்டமைப்பின் தென் மண்டல அமைப்பா ளர் சவரிமுத்து துவக்கி வைத்தார்.  கூட்டமைப் பின் அனைத்து சங்க தலைவர்கள் ஆனந்த், குமரவேலு, சசிகுமார், ஆனந்த ஜவஹர், அய்யாசாமி, பிரவீன், ஜெயமூர்த்தி, நலங் கிள்ளி, அருண் செந்தில்குமார், ராஜேந்தி ரன், வெங்கட்ராமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.  

   பொதுத்துறை விரோத, வாடிக்கை யாளர் விரோத கே.பி.ஐ செயல்திட்டத்தை ஒன்றிய அரசு உடனே திரும்பப் பெற வேண் டும், நாடு முழுவதும் அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களில் அதிகாரிகள், வளர்ச்சி  அதிகாரிகள், மற்றும் ஊழியர் என அனைத்து  பிரிவுகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை கைவிட வேண்டும், அரசு துறை 4 பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை ஒன்றாக இணைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.

   முன்னதாக முத்துக்குமரன் வரவேற் றார். செந்தில் நன்றி கூறினார். கருத்தரங்கில்  பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள், அதிகாரி கள் ஓய்வு பெற்றவர்கள் உள்பட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.