மதுரை,ஜூலை 20- ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்ட தொடர் துவங்க இருக்கும் நிலையில், அரசு பொது காப்பீட்டு ஊழி யர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். சிறப்பாக செயல்பட்டு வரும் அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களான யுனைடெட் இந்தியா , நியூ இந்தியா, ஓரியண்டல் மற்றும் நேஷனல் இன்சூ ரன்ஸ் நிறுவனங்கள் ஒரு புறம் தனியார் நிறுவனங் களோடு போட்டி, மறுபுறம் அரசு நிறுவனங்கள் தங்க ளுக்குள்ளும் போட்டி என இருமுனை தாக்குதல்களை எதிர் கொண்டு வருகின்றன. நான்கு அரசு பொது இன்சூ ரன்ஸ் நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, ஒரு வலிமை யான நிறுவனத்தை உரு வாக்க வேண்டும். தற்போது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவ காப்பீட்டு செலுத்தப்படும் பிரீமியம் தொகைக்கு 18 சத வீதம் ஜிஎஸ்டி வரி வசூல் செய்யப்படுகிறது. மக்கள் தங்கள் குடும்பத்தின் பாது காப்பிற்காக எடுத்து வரும் ஆயுள் இன்சூரன்ஸ் பாலி சிக்கு 18 சதவீதம் வரி என்ப தும், எளிய மக்கள் அத்தி யாவசிய மருத்துவ செலவு களுக்காக எடுக்கும் மருத்து வக் காப்பீட்டுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி என்பதும் ஏற்பு டையதல்ல. ஆகவே, ஆயுள் மற்றும் மருத்துவக் காப் பீட்டிற்கான பிரீமியத் தொகைக்கு முழுமையான வரி விலக்கு அளிக்க வேண்டும். பொருளாதாரம் நிலைத்து நிற்க உறுதுணை யாக இருந்து வரும் ஆயுள் காப்பீட்டு பிரிமியத்திற்கும், உயிர்காக்கும் மருத்துவச் செலவுகளுக்கு அரணாக இருந்து வரும் மருத்துவக் காப்பீட்டு பாலிசிகளுக்கான பிரிமிய தொகைக்கும் வழங்கப்பட்டுவரும் வரு மான வரி சலுகை புதிய வரு மான வரி கணக்கீட்டு (New Regime) முறைமைக்கும் விரிவுபடுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மற்றும் அகில இந்திய இன்சூரன்ஸ் பென்ச னர் சங்கத்தினர் , நாடாளு மன்ற உறுப்பினர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். நாடாளுமன்ற உறுப்பி னர்கள் ஆர்.சச்சிதானந்தம் (திண்டுக்கல்), பி.மாணிக் கம் தாகூர் (விருதுநகர்), தங்க தமிழ்செல்வன் (தேனி), கார்த்தி சிதம்பரம் (சிவகங்கை),எஸ்.முர சொலி (தஞ்சை),மற்றும் சு. வெங்கடேசன் (மதுரை) ஆகி யோரை சந்தித்து கோரிக்கை மனுக்களை அளித்தனர்.