பாபநாசம், ஏப்.23 -
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மோகன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், அம்மாபேட்டை வட்டாரம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் கீழ் ஒன்றிய அரசின் வேளாண்மை அடுக்குத் திட்டம் அனைத்து மாநிலங்களிலும் கடந்த ஒன்றாம் தேதி முதல் செயல் படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் நில விபரங்களுடன், விவசாயி களின் விவரங்கள் மற்றும் நில உடைமை வாரியாக பயிர் சாகுபடி விபரங்கள் ஆகியவற்றை இணைப்பதற் காக கிரைன்ஸ் என்ற புதிய வலைதளம் உருவாக்கப் பட்டுள்ளது. இந்த வலைதளத்தில் விவசாயிகள் பயன டையும் வகையில் விவசாயம் தொடர்புடைய 13 துறை கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த ஒற்றைச் சாளர முறையில் பதிவு செய்வதன் மூலம் விவசாயிகள் அனைத்துத் துறை பயனையும் ஒரே தளத்தில் பெற முடியும்.
நிதி திட்ட பயன்கள், விவசாயிகளின் ஆதார் எண் அடிப்படையில் அவர்களது வங்கி கணக்கிற்கு நேரடி யாக பணப்பரிமாற்றம் செய்யப்படும். அம்மாபேட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை வங்கி கணக்கு புத்தக நகல், நிலப் பட்டா நகல் ஆகிய ஆவணங்களுடன் தாங்கள் பகுதி கிராம நிர்வாக அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர், உதவி தோட்டக்கலை அலுவலர் - இவர்களில் யாரேனும் ஒருவரை தொடர்பு கொண்டு, தங்கள் ஆவணங்களை கொடுத்து இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெற லாம் என கூறப்பட்டுள்ளது.