districts

பிப்.24 முதல் கும்பகோணத்தில் இருந்து நவகிரக கோயில்களுக்கு சிறப்பு பேருந்து இயக்கம்

அரசு போக்குவரத்து மேலாண் இயக்குநர் தகவல் கும்பகோணம், பிப்.16- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து நவகிரக கோயில்கள் சிறப்பு பேருந்து பிப்ரவரி 24 முதல் இயக்கப்பட உள்ளது.  இதுகுறித்து கும்பகோணம் அரசு போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர் விடுத் துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்ததாவது: கும்பகோணத்திலிருந்து நவகிரக சிறப்பு  பேருந்து இயக்க கோரி பயணிகள் மற்றும்  பக்தர்களின் சார்பில் நீண்ட நாளாக கோரிக்கை  வைக்கப்பட்டது. பக்தர்களின் கோரிக்கை தமிழக அரசால் ஏற்கப்பட்டுள்ளது.  அதன்படி, 2024 பிப்.24 ஆம் தேதி முதல்  கும்பகோணத்திலிருந்து புறப்பட்டு, ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனைச் சுற்றி யுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே பேருந் தில் பயணம் செய்து, எந்த சிரமமும் இன்றி  மீண்டும் கும்பகோணம் பேருந்து நிலையத்தை  வந்தடையும் வகையில் நவகிரக சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது. இச்சிறப்பு பேருந்து, வாரந்தோறும் சனிக் கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் மட்டும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட் டத்தின் மூலம்  இயக்கப்பட உள்ளது. இதற்கு  பயணக் கட்டணமாக நபர் ஒன்றுக்கு ரூ. 750/- நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில், மூன்று நபர்  வாடகை கார் மூலம் நவகிரக கோவில் களுக்கு சென்று வருவதற்கு தோராயமாக குறைந்தது ரூ.6,500/-ஐ வாடகைக்கு மட்டும்  செலவு செய்ய வேண்டிய நிலை உள்ளது.

இந்நிலையில், தமிழக அரசின் சிறப்பு பேருந்து மூலம் மூன்று நபருக்கு ரூ.2250/- மட்டும் கட்டணம் செலுத்தி, நவகிரக கோவில் களுக்கு சென்று வரலாம். இச்செய்தி பயணி களுக்கு, சிறந்ததொரு பயணத் திட்டமாக அமைந்துள்ளது. அதன்படி, நவகிரக சிறப்பு பேருந்தா னது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக்  கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பேருந்து நிலையத்தில் புறப்பட்டு, திங்களூர்  சந்திரன் கோவிலுக்கும், 2 ஆவதாக திங்களூ ரிலிருந்து ஆலங்குடி சென்று காலை 7.15 மணிக்கு குரு கோவிலுக்கும் செல்லலாம். காலை உணவு இடைவேளைக்குப் பின்பு, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு காலை 9 மணிக்கு திருநாகேஸ்வரம் ராகு கோ விலுக்கும், காலை 10 மணிக்கு சூரியனார்கோ வில் சூரியன் கோவிலுக்கும், காலை 11  மணிக்கு கஞ்சனூர் சுக்கிரன் கோவிலுக்கும்,  காலை 11.30 மணிக்கு வைத்தீஸ்வரன் செவ்வாய் கோவிலுக்கும் பயணிக்கலாம். மதியம் 12.30 முதல் 1.30 வரை மதிய  உணவு இடைவேளை விடப்படும். மதியம் 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவி லுக்கும், மாலை 4 மணிக்கு கீழபெரும்பள்ளம்  கேது கோவிலுக்கும், மாலை 4.45 மணிக்கு திருநள்ளாறு சனி பகவானையும் தரிசனம் செய்யலாம். மாலை 6 மணிக்கு புறப்பட்டு, இரவு 8 மணிக்குள் கும்பகோணம் பேருந்து நிலையத்தை வந்தடையும் வகையில் இச்சிறப்பு பேருந்து இயக்கப்பட உள்ளது என தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்டவாறு, பிப்ரவரி 24 முதல் வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில், இந்த நவகிரக சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள், எவ்வித சிரமமும் இன்றி பயணிக்க,  www.tnstc.in என்ற இணையதள முகவரி யில் முன்பதிவு செய்து, தங்களது பயணச் சீட்டை பெற்றுக் கொள்ள வசதிகள்  செய்யப் பட்டுள்ளன. மேலும், மொபைல் ஆப் (Mobile App)  ஆண்ட்ராய்டு அல்லது ஐ-போன் கைப்பேசி  மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.