districts

ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது

பாபநாசம், ஆக.2 -

    தஞ்சாவூர் விற்பனைக் குழு, பாபநாசத்தை அடுத்த  கபிஸ்தலம் அருகே கீழக்  கொட்டையூர் ஒழுங்குமுறை  விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடந்தது. ஏலத்திற்கு விற்ப னைக் கூட கண்காணிப்பா ளர் பிரியமாலினி தலைமை  வகித்தார். மேற்பார்வையா ளர் பிரசாத் முன்னிலை வகித்தார். பருத்தி மறைமுக ஏலத்தில் கும்பகோணம் மற்றும் இதைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து 2054  விவசாயிகள் சராசரி 3647  குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர்.    

   கும்பகோணம், பண் ருட்டி, விழுப்புரம், சேலம்,  தேனி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 10 வணி கர்கள் ஏலத்தில் கலந்துக் கொண்டனர். அதிகபட்சம் குவிண்டாலுக்கு ரூ.7552,  குறைந்தபட்சம் ரூ.6619, சராசரி ரூ.7009 என விலை நிர்ணயம் செய்தனர். பருத்தி யின் மதிப்பு சராசரி-ரூ.2.55 கோடி.