பாபநாசம், ஜூன் 17 -
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடை பெற்றது. ஏலத்திற்கு தஞ்சா வூர் விற்பனைக் குழு செய லாளர் சரசு தலைமை வகித் தார். பாபநாசம் மற்றும் தஞ் சாவூர், திருவாரூர், அரிய லூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களி லிருந்து 376 விவசாயிகள், ரூ.30,95,224 மதிப்புடைய 500 குவிண்டால் பருத்தியை மறைமுக ஏலத்திற்கு எடுத்து வந்தனர். கும்பகோ ணம், பண்ருட்டி, செம்பனார் கோயில், விழுப்புரம், தேனி, ஆக்கூர் முக்கூட்டு, ஆந்திரா உள்ளிட்டப் பகுதிகளி லிருந்து 8 வணிகர்கள் பங் கேற்று அதிகபட்சம் ரூ.6, 769, குறைந்தபட்சம் ரூ.5,689, சராசரியாக ரூ.6,189 என விலை நிர்ணயம் செய்தனர்.