புதுக்கோட்டை, பிப்.22:- அரசு கல்லூரி விடுதிகளில் போதுமான கட்டமைப்பு வசதிகளையும், அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித்தர வேண்டு மென இந்திய மாணவர் சங்கம் வலி யுறுத்தியுள்ளது. புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூ லூரிக்கான ஆதிதிராவிடர் மாணவர் நல விடுதி, பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதிகளில் இந்திய மாணவர் சங்கத்தின் கிளை மாநாடுகள் நடைபெற்றன. மாநாடுகளில் கலந்துகொண்டு சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சா.ஜனார்த்தனன், துணைத் தலைவர் இரா.வசந்தகுமார், துணைச் செயலாளர் அ.பாலாஜி ஆகியோர் பேசினர். ஆதிதிராவிடர் மாணவர் நலவிடுதியின் கிளைத் தலைவராக துருதேஷ், செயலாள ராக தனுஷ், பிற்படுத்தப்பட்ட மாணவர் நல விடுதியின் கிளைத் தலைவாராக சுரேஷ், செயலாளராக கலைவாணன், மிகவும் பிற் படுத்தப்பட்ட மாணவர் நல விடுதியின் கிளைத் தலைவராக மோகன்ராஜ், செய லாளராக ஸ்டிவன்சன் ஆகியோர் புதிய நிர்வாகிகளாகத் தேர்வு செய்யப்பட்டனர். மேற்கண்ட மாணவர் விடுதிகளின் கட்ட மைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். சுகாதாரமான குடிநீர் வழங்குவதோடு, கழிப் பறைகளை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். தரமான உணவு வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாடுகளில் நிறைவேற்றப்பட்டன.