districts

img

இந்தியா - இலங்கை பயணியர் கப்பல் போக்குவரத்து தொடக்கம்

நாகப்பட்டினம், அக்.14- நாகப்பட்டினம் துறைமுகத்தி லிருந்து காங்கேசன் கடல் துறைக்கு பயணிகள் கப்பல் போக்கு வரத்து, இந்திய கப்பல் போக்கு வரத்து கழகத்தால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.  இதற்கான தொடக்க விழா நாகப் பட்டினம் துறைமுக வளாகத்தில் நடைபெற்றது. இதில் சிபிஎம்  கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பி னருமான நாகைமாலி கலந்து கொண்டார். இந்திய கடற்பரப்பின் கிழக்கு கரையில் இயற்கையாக அமைந்த துறைமுகம் நாகப்பட்டினம். சோழ  சாம்ராஜ்யம் துவங்கி, இந்தியா விற்கு முதன்முதலாக வெளியி லிருந்து வந்த போர்ச்சுகீசியர்கள் வரை பயன்படுத்திய துறைமுகம் நாகப்பட்டினம். சரக்கு கப்பல் முதல் தர்ம கப்பல் வரை, இந்த  துறைமுகத்தில் 1982 வரை போக்கு வரத்து நடைபெற்றுக் கொண்டிருந் தது.  பல்வேறு காரணங்களால் போக்குவரத்து தடைபட, துறை முக நகரம் என்கிற பெருமையை யும் இழந்தது. அதற்குப் புத்துயிர் ஊட்டும் வகையில் மீண்டும் பயணி யர் கப்பல் போக்குவரத்து தொடங் கப்பட்டுள்ளது. இந்தியா - இலங்கை அரசு களுக்கு இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு இந்த பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்கியுள்ளது. சுமார் 3 மணிநேரத்தில் காங்கே சன் துறைமுகத்திற்கு செல்வதற்கு  கட்டணமாக ரூ.7670 (ஜிஎஸ்டி 18  சதவீதம் உட்பட) வசூலிக்கப்படு கிறது.  தொடக்க விழா நாளன்று மட்டும் 75 சதவீதம் கட்டண விலக்கு  தரப்பட்டது.

150 பயணிகள் செல்லும் விதத்தில் ‘எச்.எஸ்.சி  செரியா பாணி’ என்ற விரைவு பய ணியர் கப்பல் இந்த போக்கு வரத்தை தொடங்கியுள்ளது. முன்பதிவு செய்திருந்த 50 பயணி கள் இதில் பயணித்தனர். தென்னிந்தியாவிற்கும் இலங்கையின் வடபகுதிக்கும் இணைப்பை ஏற்படுத்துதல், பயண நேரத்தை குறைத்தல், அதிகமான  பொருட்களை எடுத்துச் செல்லுதல் (50 கிலோ வரை) யாத்திரிகர்கள், வணிகர்கள், மாணவர்கள், வழக் கமாக பயணங்களை மேற்கொள்ப வர்கள் என அனைவரும் பயன்ப டும் வகையில் இத்திட்டம் உரு வாகியுள்ளது. நாகை துறை முகம், திருச்சி சுங்கத்துறை கட்டுப் பாட்டின்கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. இது பன்னாட்டு துறைமு கம் என்ற அந்தஸ்தையும் பெற்றுள் ளது.  இந்நிகழ்வில் கலந்து கொண்ட  அமைச்சர் எ.வ.வேலு, கட்டணத் தொகை அதிகமாக இருப்பதால் பயண கட்டணத்தில் 50 சதவீத தொகையை ஒன்றிய அரசு மானிய மாக பயணிகளுக்கு வழங்க வேண் டும் என்று கேட்டுக் கொண்டார்.  தமிழக அமைச்சர் எஸ்.ரகு பதி, மத்திய கப்பல் போக்குவ ரத்து துறை அமைச்சர் சர்பானந்த  சோனாவால், நாகை நாடாளு மன்ற உறுப்பினர் எம்.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் ஜானிடாம் வர்க்கீஸ், மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என்.கௌதமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹர்ஷ்சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.