திருவாரூர், ஆக.16-
கொரடாச்சேரி ஒன்றியம் வெட்டாற்று பாலம் அருகே இந்திய தொழிற்சங்க மையம், விவசாயத் தொழிலாளர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பாக ‘விடியலை நோக்கி இந்தியா 2023’ கலை இரவு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாவட்டச் செயலாளர் கே.எஸ்.செந்தில் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எம்.சேகர், விவசாயத் தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் பி.கந்த சாமி, இந்திய தொழிற்சங்க மையத்தின் மாவட்டச் செயலாளர் டி.முருகையன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர்.
சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தர மூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எஸ்.தம்புசாமி, சிஐடியு மாவட்டத் தலைவர் எம்.கே. என்.அனிபா, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட பொருளாளர் ஆறு.பிரகாஷ் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா கருத்துரையாற்றினார்.
முன்னதாக காவிரி கலைக்குழு ஆரூர் மகாலிங்கம், செல்வி எம்.நவமித்ரா, ஆலங்குடி மோகனா, வடக்கு பனையூர் ஜெயந்தி மற்றும் டெல்லி புகழ் ஆதித்தமி ழர் சரவணன் குழுவினரின் கிராமிய தப் பாட்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கொரடாச்சேரி சிபிஎம் ஒன்றி யச் செயலாளர் டி.ஜெயபால் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.