districts

img

அறந்தாங்கியில் இந்தியா கூட்டணி தேர்தல் அலுவலகம் திறப்பு

அறந்தாங்கி,  மார்ச் 31 - தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பாக, இராமநாதபுரம் நாடாளுமன்றம், அறந் தாங்கி சட்டமன்றத் தொகுதி யின் தேர்தல் அலுவலகம் திறப்பு விழா புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலை வடகரை முருகன் கோவில் அருகில் நடைபெற்றது.  சட்டம் மற்றும் நீதி மன்றங்கள் துறை அமைச் சர் எஸ்.ரகுபதி, இராமநாத புரம் தொகுதியில் இந்திய முஸ்லிம் லீக் கட்சி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் கே.நவாஸ்கனி ஆகியோர் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.  நிகழ்ச்சியில் திமுக ஆ. கோவில் வடக்கு ஒன்றியச் செயலாளர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் உதயம் சண்முகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச்  செயலாளர் எஸ்.கவி வர்மன், சிபிஐ மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாதவன் உள்பட இந்தியா கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.