districts

மதுரையில் எஸ்சி., எஸ்டி பிரிவின் கீழ் பதிவான வழக்குகள் அதிகரிப்பு

மதுரை, ஏப்.30- மதுரையில் எஸ்சி. எஸ்டி பிரிவின் கீழ்  பதிவான வழக்குகள் அதிகரித்துள்ளதாக ஆர்டிஐ தகவல் மூலம் தெரியவந்துள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தா னம் என்பவர், எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் மதுரை உட்பட ஐந்து, மாவட்டங்களில் 2018 முதல் 2023ம் ஆண்டு வரை பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை  குறித்து, ஆர்டிஐ வாயிலாக கேள்வி எழுப்பி யிருந்தார். இதற்கு கிடைத்த பதிலில், 480 வழக்குகளுடன் மதுரை முதலிடமும், 332 வழக்குகளுடன் தேனி இரண்டாமிடமும், 244 வழக்குகளுடன் திண்டுக்கல் மூன்றாமி டமும், 233 வழக்குகளுடன் விருதுநகர் நான்காமிடமும், 229 வழக்குகளுடன் இராம நாதபுரம் ஐந்தாமிடத்திலும் உள்ளன. இந்த பட்டியலிலேயே கொலை மற்றும் போக்சோ வழக்குகள் எதுவும் பதிவு  செய்யப்படாத மாவட்டமாக திண்டுக்கல் உள்ளது. கொலை வழக்கு குறைவாக பதி வான மாவட்டமாக தேனி உள்ளது. அங்கு,  4 கொலை வழக்குகளும், 10 போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதே போல், போக்சோ வழக்கு குறைவாக பதிவான மாவட்டமாக இராமநாதபுரம் உள் ளது. அங்கு, 12 கொலை வழக்குகளும், 9  போக்சோ வழக்குகளும் பதிவாகியுள்ளன. அதேபோல், போக்சோ வழக்குகள் அதிகம்  பதிவான மாவட்டமாக, விருதுநகர் மாவட்டம்  உள்ளது. இந்த மாவட்டத்தில் 26 போக்சோ வழக்குகளும், 10 கொலை வழக்குகளும் பதி வாகியுள்ளன.  மதுரையை பொறுத்தவரை எஸ்சி எஸ்டி பிரிவினருக்கு எதிராக நடந்ததாக, 30  கொலை வழக்குகளும், 17 போக்சோ வழக்கு களும் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது. உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை இது குறித்து, வழக்கறிஞர் சந்தானம் கூறுகையில், “கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களை விட  மதுரையில் எஸ்சி எஸ்டி பிரிவின் கீழ் பதிவு  செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை யானது உயர்ந்துள்ளது. இச்சட்டப்படி நிவா ரணம் வழங்குவது கட்டாயம். ஆனால், பல  வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு நிதி நிவாரணம் வழங்கு வது தவிர்த்து, இழப்பீடாக நிலம், பாதிக்  கப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு  அரசு வேலை, மாதாந்திர உதவி தொகை வழங்குவது என பல்வேறு நிவாரணங்கள் வழங்கப்படாமலேயே உள்ளன. இதனால்,  வன்முறை சம்பவங்களில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் பலர் நிவாரணம் கிடைக்காமல் பொருளாதார ரீதியாக கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரணங் கள், அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பெரி யளவில் உதவியாக அமையாவிட்டாலும், அவர்களின் அன்றாட தேவைகளையாவது பூர்த்தி செய்ய உதவும். எனவே, அரசு இச்சட்டத்தின் கீழ் நிவாரண உதவிகள் கிடைக்காமல் இருப்பவர்களை கண்ட றிந்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.