districts

img

கால்நடை மருந்தக கட்டிடம் திறப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ஆதனூரில் நபார்டு திட்ட நிதி ரூ.53.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தக கட்டிடத் திறப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று கட்டிடத்தைத் திறந்து வைத்தார். திருவையாறு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன், கூடுதல் ஆட்சியர் ஸ்ரீகாந்த் மற்றும் கால்நடை மருத்துவர்கள், ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.