பாபநாசம், மார்ச் 10 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசத்தில் கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை சார்பில் ரூ.77.50 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனை கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி, மருத்துவமனை கட்டிடத்தை திறந்து வைத்தார். திருவையாறு எம்.எல்.ஏ துரை.சந்திரசேகரன், கும்பகோணம் மாநகர துணை மேயர் தமிழழகன், பாபநாசம் பேரூ ராட்சித் தலைவர் பூங்குழலி, பாபநாசம் ஒன்றியக் குழுத் தலைவர் சுமதி, பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், பாபநாசம் பேரூ ராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், கால்நடை பராமரிப்புத் துறை கும்பகோணம் உதவி இயக்குநர் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். பரிவர்த்தனைக் கூடம் திறப்பு பாபநாசத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டம், ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதி திட்டத்தின்கீழ் ரூ.1.05 கோடி மதிப்பீட்டில் 500 மெட்ரிக் டன் கொள்ள ளவு கொண்ட பரிவர்த்தனைக் கூடம் திறப்பு விழா நடைபெற்றது. தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார். பாப நாசம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண் காணிப்பாளர் தாட்சாயிணி, பாபநாசம் வேளாண்மை உதவி இயக்குநர் (பொ) மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.