districts

திருச்சி முக்கிய செய்திகள்

ஜன.3 அரியலூரில்  வேலைவாய்ப்பு முகாம்

அரியலூர், டிச.31 - அரியலூரிலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலு வலகத்தில் சிறிய அளவி லான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (ஜன.3) நடைபெறுகிறது என்று ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரி விக்கையில், “இம்முகா மில் எம்.ஆர்.எப் நிறுவனம் கலந்து கொண்டு 200-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு தங்க ளுக்கு தேவையான ஆட்களை தகுதியின் அடிப் படையில் தேர்வு செய்ய உள்ளனர். எனவே இம்முகாமில் பட்டப்படிப்பு படித்து முடித்த 18-25  வயதுக்குட்பட்ட ஆண்கள்  மட்டும் கலந்து கொள்ள லாம். மேலும் விவரங் களுக்கு 9499055914 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்” என்றார்.  

சுதந்திரப் போராட்டத்  தியாகிகள்  குறைதீர் கூட்டம் 

தஞ்சாவூர், டிச.31 -  தஞ்சாவூரில் சுதந்திரப்  போராட்ட வீரர்கள் குறை தீர்க்கும் கூட்டம், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், ஜன.3 அன்று பிற்பகல் 2.30 மணியளவில் நடைபெற உள்ளது. அக்கூட்டத்தில், சுதந்திர போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் அனைவரும் கலந்து கொண்டு ஓய்வூதியப் பலன்கள் குறித்து தங்கள்  குறைகளையும், ஆலோச னைகளையும் நேரில் தெரி விக்கலாம் என மாவட்ட  ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம் தெரிவித்துள்ளார்.

கலந்தாய்வு கூட்டம்

பாபநாசம், டிச.31 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி பெற்றோர் - ஆசிரியர் கலந்தாய்வுக் கூட்டம் பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு பள்ளிச் செயலர் வரத ராஜன் தலைமை வகித்தார்.  பள்ளி துணை முதல்வர் சித்ரா முன்னிலை வகித்தார்.  முதுகலை ஆசிரியர் ரகு வர வேற்றார். பள்ளி முதல்வர் தீபக் சிறப்புரையாற்றி னார். இதில் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாண வர்கள் பங்கேற்றனர். பட்டதாரி ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

காட்டாற்று மணலில் கிடந்த கால பைரவர் சிலை ஒப்படைப்பு

தஞ்சாவூர், டிச.31 -  தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே மடத்திக்காடு கிராமத்தில் அக்கினி ஆறு தடுப்பணை உள்ளது. தடுப்பணை கரையை ஒட்டிய மணல் பகுதிகளில் விவசாயிகள் பனை விதைகளை நட்டு  வைத்து, பனங்கிழங்குகள் பறிப்பது வழக்கம். திங்கள் கிழமை மடத்திக்காடு பகுதியை சேர்ந்த முருகே சன் என்பவர் பனங்கிழங்கு கள் பறித்துக் கொண்டி ருந்த போது மணலுக்குள் சுமார் ஒன்றரை அடி  உயரமுள்ள கருங்கல்லா லான கால பைரவர் சிலை  கிடந்தது.  இது குறித்து வருவாய் ஆய்வாளர் புவனா, கிராம  நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் வரு வாய் துறையினர் சிலை யைக் கைப்பற்றி பட்டுக் கோட்டை தாலுகா அலுவல கத்தில் வட்டாட்சியர் சுகு மாரிடம் ஒப்படைத்தனர்.

அரியலூர் ஆட்சியரகத்தில் திருவள்ளுவர் சிலை திறப்பு

அரியலூர், டிச.31 - கன்னியாகுமரியில் அய்யன் திருவள்ளுவர் உருவச்சிலை அமைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த வெள்ளி விழாவையொட்டி, அரியலூர் ஆட்சியரகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அய்யன் திருவள்ளுவர் சிலை திறப்பு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி, திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து திருவள்ளுவர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.  நெய்வனம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஆம் வகுப்பு பயின்று வரும் மாணவி பி.ரே.தாரகை, தான் சேமித்து வைத்திருந்த ரூ.1100 தொகையை முதல்வரின் வெள்ள நிவாரண நிதியாக ஆட்சியரிடம் வழங்கினார்.

அரசு போட்டித் தேர்வுகளுக்கு  ஜன.2 முதல் இலவச பயிற்சி

தஞ்சாவூர், டிச.31 -  தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னார்வ பயிலும் வட்டம் மூலமாக போட்டித் தேர்வுகளுக்கான இலவச  பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் போட்டித் தேர்வு களுக்குத் தயாராகும் மாணவர்கள் அதிகளவில் பங்கு பெற்று பயனடைந்து வருகின்றனர். தற்போது டிஎன்பிஎஸ்சி  தொகுதி IIA முதன்மைத் தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசுப்  பணியாளர் தேர்வாணையத்தால் ஏப்ரல் மாதத்தில் அறிவிக்கப்படவுள்ள, தொகுதி IV தேர்வு ஜூலை மாதத்தில்  நடைபெறவுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இத்தேர்விற்குத் தயாராகி வரும் போட்டித் தேர்வா ளர்கள் பயன்பெறும் வகையில், கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும்  தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜன.2 (வியாழக் கிழமை) முதல் தொடங்கப்படவுள்ளன.  இப்பயிற்சி வகுப்பு திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய நாட்களில் காலை 10.30 மணி முதல் 01.30 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

அம்மாபட்டினத்தில் ‘பட்டதாரிகள் கல்வி இயக்கம்’ தொடக்கம்

அறந்தாங்கி, டிச.31 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த அம்மாபட்டினத்தில் பட்டதாரிகள் ஒருங்கி ணைப்பு கூட்டம் நடைபெற்றது.  இக்கூட்டத்திற்கு முஹம்மது கஸ்ஸாலி தலைமை வகித்தார். அம்மாபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட அம்மாபட்டினம், ஆவுடை யார்பட்டினம், ஆதிப்பட்டினம் ஆகிய ஊர்களைச்  சேர்ந்த பட்டதாரி மற்றும் டிப்ளமோ படித்த வர்களை ஒன்றிணைத்து, அந்த பகுதிகளில் உள்ள மக்களின் கல்வி முன்னேற்றத்திற்காக ஒரு இயக்கம் துவங்கப்பட்டது.  அந்த இயக்கத்திற்கு “பட்டதாரிகள் கல்வி  இயக்கம்” என பெயரிடப்பட்டுள்ளது. புதிதாக துவக்கப்பட்டுள்ள பட்டதாரிகள் கல்வி இயக்கத் திற்கு நிர்வாக தேர்வும் நடைபெற்றது. அதில் தலைவராக ஆவுடையூனுஸ், அஹமது தம்பி  துணைத் தலைவராகவும், முகமது ஜலீல் செய லாளராகவும், சபீல் அஹமது பொருளாளராக வும், ஜகுபர் சாதிக் துணை செயலாளராகவும்   தேர்ந்தெடுக்கப்பட்டனர். நிர்வாகிகள் தேர்ந்தெ டுப்பு கூட்டத்தில் சுமார் 75 நபர்கள் நேரிலும், இணையவழி மூலமும் பங்கேற்றனர். இதற்கு  பொதுமக்கள் பாராட்டும் வரவேற்பும் தெரிவித்தனர்.

பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் இச்சங்குடி பட்டிலின மக்களை  நிலத்திலிருந்து வெளியேற்றுவதா?

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கண்டனம் புதுக்கோட்டை, டிச.31- புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பல தலைமுறைகளாக சாகுபடி செய்து வரும் இச்சங்குடி பட்டியலின மக்களை நிலத்திலிருந்து வெளியேற்றும் நடவடிக்கையை தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டக் குழு கூட்டம் மாவட்டத் தலைவர் எஸ்.பொன்னுச்சாமி தலைமையில் செவ்வாய்க்கிழமை புதுக் கோட்டையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கே.முகமதலி மாநிலக்குழு முடிவுகளை விளக்கிப் பேசி னார். நடைபெற்ற வேலைகள் குறித்து மாவட்டச் செயலாளர் ஏ.ராமையன் பேசினார். மாவட்டப் பொருளாளர் எம்.பால சுந்தரமூர்த்தி, துணைச் செயலாளர் த. அன்பழகன், துணைத் தலைவர் பாண்டியன்  உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மா னத்தில், “புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் தாலுகா கோத்ராப்பட்டி ஊராட்சி இச்சங்குடி கிராமத்தைச் சேர்ந்த பட்டியலின மக்கள் சுமார் நூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அருகில் உள்ள தளிஞ்சி கிராமத்தில் உள்ள சுமார் 50 ஏக்கர் அளவில் உள்ள நிலத்தில் பல  ஆண்டுகளாக விவசாயம் செய்து வருகின்ற னர். மேற்படி நிலம் முகமது ராவுத்தர் மகன் சையது முகமது ராவுத்தர், முகமது யூசுப் மகன் சையது முகமது ராவுத்தர், முகமது அலி மகள் அப்துல் மஜீத் ஆகியோருக்கு சொந்தமானது. இவர்கள் தற்பொழுது திருச்சி யிலும், புதுக்கோட்டையிலும் வசித்து வரு கின்றனர். மேற்படி நிலத்தில் சாகுபடி முடிந்ததும் அவர்களுக்கு சேர வேண்டிய குத்தகையை தவறாமல் செலுத்தி வந்துள்ள னர். இந்நிலையில், மேற்படி நிலத்தில் பல தலைமுறைகளாக சாகுபடி செய்த விவசா யிகளை வெளியேற்றிவிட்டு நிலத்தை ரியல்  எஸ்டேட் கும்பலிடம் திடீரென விற்பதற்கு நிலத்தின் உரிமையாளர்கள் முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதி  பட்டியலின மக்களை மிகவும் அதிர்ச்சியி லும் வேதனையிலும் ஆழ்த்தி உள்ளது. எனவே தமிழ்நாடு அரசும், புதுக் கோட்டை மாவட்ட நிர்வாகமும் உடனடி யாகத் தலையிட்டு, மேற்படி நிலத்தை ரியல் எஸ்டேட்டிடம் விற்கும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும். மேலும், காலம் காலமாக விவசாயம் செய்து வரும் பட்டிய லின மக்களுக்கு அந்நிலத்துக்கான உழ வடைப் பட்டாவை விரைந்து வழங்குவ தற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என  கூறப்பட்டுள்ளது.

டிராக்டரை பதிவு செய்து தராததால்  விவசாயிக்கு ரூ.14.10 லட்சம் வழங்க நுகர்வோர் ஆணையம் உத்தரவு

தஞ்சாவூர், டிச.31- விற்கப்பட்ட டிராக்டரை பதிவு செய்து தராமல் காலம் தாழ்த்தியதால் பாதிக்கப் பட்ட இரு விவசாயிகளுக்கு ரூ. 14.10  லட்சம் வழங்குமாறு தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் ஆணை யம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே திருக்கண்ணம்பூண்டி சலுவன் பேட்டையைச் சேர்ந்த விவசாயிகளான  சி.தவச்செல்வன், ஆர்.சேவைய்யா ஆகியோரை, கும்பகோணம் தாரா சுரத்தில் இயங்கி வரும் தனியார் டிராக்டர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் கள் 2019 ஆக.28 அன்று அணுகினர்.  அப்போது, தவச்செல்வன், சேவைய்யாவிடம் தனியார் நிறுவனத்தி னர் புதிய டிராக்டரை ரூ. 8.59 லட்சத் துக்கு வாங்கிக் கொள்ளுமாறும், பழைய டிராக்டரை ரூ.2.50 லட்சத் துக்கு பெற்றுக் கொள்வதாகவும், இதற்கு தனியார் வாகன கடன் வழங்கும் நிறுவனத்திடம் ரூ.5 லட்சம்  வாகனக் கடனுறுதி பெற்றுத் தருவ தாகவும், நேரடியாக ரூ. 1 லட்சத்தை செலுத்துமாறும் கூறினர். இதை  நம்பிய தவச்செல்வனும், சேவைய்யா வும் ஒப்புக் கொண்டு புதிய டிராக்டரை  வாங்கினர். ஆனால், இதுவரை தனி யார் டிராக்டர் நிறுவனத்தினர் டிராக்டரை  பதிவு செய்து கொடுக்கவில்லை. மேலும், தனியார் நிறுவனத்தினர் கூறிய  சலுகைகளையும் வழங்கவில்லை.  இந்நிலையில், தவச்செல்வன், சேவைய்யாவை தனியார் கடன் நிறு வனத்தினர் அணுகி தவணைத் தொகையைச் செலுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதனால், தஞ்சாவூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் தவச்செல்வன், சேவையா புகார் மனு  தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ஆணையத் தலைவர் த.சேகர், உறுப்பினர் கே.வேலுமணி விசாரித்து,  தனியார் டிராக்டர் நிறுவனம் டிராக்டரை 4 ஆண்டுகள் வரை வாகனப்  பதிவு செய்து கொடுக்காமல் காலம்  தாழ்த்தி வருவதால், முறையீட்டாளர் களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் 4 ஆண்டுகளுக்கு ரூ. 4 லட்சத்தை  9 சதவீத வட்டியுடன் தனியார் நிறுவனம்  வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.  மேலும், இவ்வாணையத்தில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்த ரவை மதிக்காமல் வேண்டுமென்றே காலம் தாழ்த்தியதால், முறையீட்டா ளருக்கு ஏற்பட்ட மன உளைச்சல், பொருள் இழப்பு, வீண் அலைக்கழிப்பு  ஆகியவற்றுக்கு ஒட்டுமொத்த இழப்பீ டாக ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும்  எனவும், வழக்கு செலவுத் தொகையாக  ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும், இந்த உத்தரவுத் தொகையை இந்த ஆணையுரையின் நகல் கிடைக்கப் பெற்ற 45 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் உத்தரவுத் தொகைக்கு மனுத் தாக்கல் செய்த தேதியான 2022 ஆக.16 முதல் தொகையை திரும்ப  வழங்கும் நாள்வரை கூடுதலாக 12 சத வீத வட்டியுடன் சேர்த்து செலுத்த  வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

நூறு நாள் வேலையை உடனே துவங்குக!
ஒலியமங்கலத்தில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

பொன்னமராவதி, டிச.31 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் ஒலியமங்கலம் ஊராட்சியில் நூறு  நாள் வேலையை உடனே துவங்கக் கோரியும்,  ஒலியமங்கலம் ஊராட்சியில் மக்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும் அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தி னர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  ஒலியமங்கலம் அரசமரம் அருகே ஒன்றியப் பொருளாளர் டி.சிவசுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் டி.சலோமி, மாவட்டப் பொருளாளர் கே.சண்முகம் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். ஒன்றியச் செயலாளர் பி.ராம சாமி, ஒன்றியத் தலைவர் கே.ஆர்.பழனி யப்பன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா ளர் பாண்டியன், ஒன்றியத் தலைவர் எம்.ராமசாமி ஆகியோர் பங்கேற்றனர். கண்மாய்களை சரி செய்து பாசன வசதி களை மேம்படுத்த வேண்டும். குடிநீர் பிரச்சனை களை சரி செய்ய வேண்டும், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருக்கடையூரில் ரேக்ளா பந்தயம்:  ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை, டிச.31 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூரில் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி புகழ்பெற்ற பாரம்பரிய ரேக்ளா பந்தயம் நடத்துவதற்கான ஆலோ சனைக் கூட்டம் நடைபெற்றது. 8 ஊராட்சி மன்ற தலை வர்கள் மற்றும் கிராம மக்கள் சார்பில் சன்னதி வீதியில்  நடைபெற்ற கூட்டத்தில், அனைத்து கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் தில்லை யாடி உத்திராபதியார் மற்றும் நாராயணசாமி நினைவை யொட்டி மாடு, குதிரை ரேக்ளா பந்தயம் காணும் பொங்கலையொட்டி ஆண்டுதோறும்  நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் 2025 காணும் பொங்கல் அன்று ரேக்ளா  பந்தயம் நடத்துவதற்கான ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலை வரும், தி.மு.க. மத்திய ஒன்றிய செயலாளருமான அமுர்த  விஜயகுமார் தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.சிம்சன், ரேக்ளா பந்தய நிர்வாகி பாலசுப்பிரமணியன், ஒன்றியக் குழு துணைத் தலைவர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயமாலதி சிவராஜ் வரவேற்றார்.  கூட்டத்தில், இந்த ஆண்டு எல்கை பந்தயத்தை நடத்துவது, நிர்வாகிகள், மற்றும்  திருக்கடையூர், டி.மணல்மேடு, பிள்ளை பெருமாள்நல்லூர், மாணிக்கப் பங்கு, காழியப்பநல்லூர், கிள்ளியூர், தில்லையாடி ஆகிய 7 ஊராட்சிகள் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சித் தலை வர்கள் இணைந்து சிறப்பாக நடத்துவது. 500-க்கும் மேற்பட்ட ரேக்ளா மாடு, குதிரைகள் பங்கேற்பது, விழா விற்கு அமைச்சர், காவல்துறை, வருவாய்த்துறை, எம்.பி,  எம்.எல்.ஏ. மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ-க்களுக்கு அழைப்பு விடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. 

சாலை விபத்தில் குழந்தைகள் பலி பெற்றோருக்கு பூம்புகார் எம்எல்ஏ  நிவாரணத் தொகை வழங்கல்

மயிலாடுதுறை, டிச.31 -  மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகே உள்ள எடுத்துக்கட்டி மாதாகோவில் தெருவைச் சேர்ந்தவர்  அந்தோணி விக்டர்ராஜ். இவரது மகன் விக்கி(எ) அந்தோணி விக்ரந்த்ராஜ் (13)திருக்களாச்சேரி ஹமீதியா  அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளியில் 7 ஆம் வகுப்பு  படித்து வருகிறார். அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து  வரும் இரட்டை சகோதரிகள் பியூலா ஹான்சி (15), பியூலா நான்சி (15) ஆகிய மூவரும், காட்டுச்சேரி சமத்துவ புரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்துக்கு சம்பவத் தன்று காலை ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளனர். பொறையார் அருகே காட்டுச்சேரி ஊராட்சி காராம் பள்ளம் மெயின் சாலையில் சென்ற போது, எதிரே நாகை யில் இருந்து மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசுப் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பியூலா நான்சி உயிரிழந்தார்.  மற்ற இருவரும் படுகாயமடைந்த நிலையில், மயிலாடு துறை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டு இருந்தனர். மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் விக்கி(எ) அந்தோணி  விக்ரந்த்ராஜ் (13) சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை  பலனின்றி இரண்டு தினங்களுக்கு முன் உயிரிழந்தார். ஒரே  குடும்பத்தில் அக்கா, தம்பி விபத்தில் உயிரிழந்தனர்.  இச்சம்பவம் தொடர்பாக நிவேதா முருகன் எம்.எல்.ஏ.  நேரில் சென்று ஆறுதல் கூறினார். தொடர்ந்து அவர்  தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் ஒரு லட்சத்திற்கான காசோலையை பெற்றோரிடம் வழங்கினார்.

நவம்பர் மாத ஊக்கத்தொகை  வழங்கவில்லை  மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் மனு

தஞ்சாவூர், டிச.31 -  மக்களைத் தேடி மருத்துவம் ஊழியர்கள் (சிஐடியு) சங்கம் சார்பில், மாவட்டச் செயலாளர் சாய் சித்ரா, சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.  அம்மனுவில், “மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தின்கீழ், பெண் சுகாதாரத் தன்னார்வலர்கள் தஞ்சை மாவட்டத்தில் 351 பேர் பணிபுரிந்து வருகிறோம். எங்களை பணி அமர்த்திய போது தொற்றாநோய்களை கண்டறிய வேண்டும் மற்றும் மருந்து பெட்டகம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டது.  இதனுடன் தொற்றா நோய்களான காசநோய், தொழுநோய் ஆகிய இரண்டிற்கும் பரிந்துரை செய்து வருகிறோம். ஆனால், தற்போது காச நோய்களை கண்டறியும் சளி மாதிரிகளை சேகரித்துக் கொண்டு வந்து, அந்தந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. எங்களுக்கு பாதுகாப்பு இல்லா இப்பணியை செய்ய நாங்கள் மறுப்பதால் எங்களது மாதாந்திர ஊதியச் சான்றில் கையொப்பமிட மறுக்கிறார்கள்.  இதனுடன் நவம்பர் மாத ஊக்கத்தொகை கிராமப்புற தன்னார்வலர்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை. எனவே இதில், மாவட்ட ஆட்சியர் தலையிட்டு பணிச்சுமை இல்லாமலும், மாத ஊக்கத் தொகையை தாமதமின்றியும் வழங்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என கூறப்பட்டுள்ளது.

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு  கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்  தஞ்சாவூர், டிச.31 -  தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 11, 12 ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மற்றும்  கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன என தஞ்சாவூர்  மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்து உள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,  “தமிழ்நாட்டிலுள்ள 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களிடையே பேச்சாற்ற லையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மாவட்டம் வாரியாக கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. நிகழாண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 11, 12ஆம் வகுப்பு பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜன.21 அன்றும், கல்லூரி  மாணவர்களுக்கு ஜன.22 அன்றும் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்  நடைபெறவுள்ளன.  இப்போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் போட்டி யில் கலந்து கொள்வதற்குரிய படிவத்தை நிறைவு செய்து பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர், துறைத் தலைவரின் பரிந்துரையுடன் போட்டி தொடங்கும் முன்பு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரிடம் அளிக்க வேண்டும்.  ஒவ்வொரு பள்ளி மற்றும் கல்லூரியிலிருந்தும் கவிதை,  கட்டுரை, பேச்சுப் போட்டிகளில், ஒவ்வொரு போட்டிக்கும் ஒருவர் வீதம் மொத்தம் 3 மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். போட்டிகளுக்குரிய தலைப்புகள் போட்டி  தொடங்குவதற்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிக்கப்ப டும் என மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரி வித்துள்ளார்.