districts

img

தமுஎகச வாசிப்பு இயக்கம் துவக்க விழா

திருவாரூர், மே 12 - தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக வாசிப்பு இயக்க துவக்க விழா கஸ்தூரிபா காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் தலைமை மு.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.பகவான்ராஜ் வரவேற்றார். கு.வேதாரத்தினம் முன்னிலை வகித்தனர். வாசிப்பு இயக்கத்தில் பங்கேற்ற எழுத்தாளர் ஐ.வி.நாகராஜன் துவக்க உரையாற்றினார். அமைப்பின் மேனாள் மாநிலத் தலைவரும் எழுத்தாளருமான ச.தமிழ்ச்செல்வன்  நிறைவுரையாற்றினார்.  முன்னதாக பல்வேறு தலைப்புகளில் உள்ள நான்கு புதினங்கள் நிகழ்ச்சியில் வாசிக்கப்பட்டன. வாசிப்பின் நோக்கத்தை விளக்கி மாவட்டச் செயலாளர் ஜீ.வெங்கடேசன் உரையாற்றினார். கணினி சமூக செயல்பாட்டாளர் பேராசிரியர் திருச்சி அன்வர், எண்கண் புலவர் மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.  நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், புத்தக வாசிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்டக் குழு உறுப்பினர் ஆரூர். மகாலிங்கம் நன்றி கூறினார்.